மேலும் அறிய

ATM: ரூ.500 கேட்டால் ரூ.2500 வருது.. அள்ளிக்கொடுத்த ஏடிஎம்! கூடிய கூட்டம்! நடந்த தவறு இதுதான்!!

ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.

ஏடிஎம்:

பணப் பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான சேவையாக மாறிவிட்டது ஏடிஎம். ஒருநாள் ஏடிஎம்கள் முடங்கினாலே மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் நிலைமைதான் தற்போது. இப்படி நமக்கான தேவைக்கு நாம் குறிப்பிடும் பணத்தை வழங்கும் ஏடிஎம், எக்ஸ்ட்ராவாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு இன்ப அதிர்ச்சியை நாக்பூர் ஏடிஎம் கொடுத்துள்ளது.

நாக்பூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ஒருவர் ஏடிஎம் கார்டை சொருகி ரூ.500ஐ அழுத்தியுள்ளார். ஒரு நோட்டு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஏடிஎம்.  ரூ.500 நோட்டே 5 வந்துள்ளது. அதாவது ரூ.500 பதிவிட்ட நபருக்கு ரூ.2500 கொடுத்துள்ளது ஏடிஎம். ஆஹா என சந்தோஷமடைந்த அவர், மீண்டும் ரூ.500ஐ பதிவிட்டுள்ளார்.மறுபடி ரூ.2500 கொடுத்துள்ளது ஏடிஎம். இந்த தகவல் அந்தப்பக்கம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவ ரூ.500 போட்டால் ரூ.2500 வருகிறது என கூட்டம் கூடியது. 


ATM: ரூ.500 கேட்டால் ரூ.2500 வருது.. அள்ளிக்கொடுத்த ஏடிஎம்! கூடிய கூட்டம்! நடந்த தவறு இதுதான்!!

கூட்டம்

ஓவர் கூட்டத்தைப் பார்த்து ஷாக் ஆன வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.  உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கூட்டத்தைக் கலைத்துவிட்டு ஏடிஎம்மை இழுத்து மூடினர். இது தொடர்பாக அந்த ஏடிஎம்க்கு தொடர்புடைய வங்கிக்கும் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஏடிஎம்மை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

100 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்காக ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 ரூபாய் நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கவனக்குறைவுதான் இந்த சிக்கலுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. 

இறந்தபின் ஏடிஎம்..

ஏடிஎம் தொடர்பாக அரசும் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஒருவர் இறந்தபின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அதில்,ஒருவர் இறந்த பின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஒருவர் இறந்த பின், அவரது இறப்பு குறித்து வங்கிக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது குழந்தைகள் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுத்துக் கொண்டு, பிறகு வங்கியிடம்  அவரது இறப்பு குறித்து தகவலைத் தந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும். மேலும், சட்டப்பூர்வமான வாரிசு யார் என்ற மோதலுக்கும் இது வித்திட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுப்பது என்பது வங்கியையும், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளையும் ஏமாற்றுவதற்குச் சமமாகக் கருதப்படும். இப்படியான நிலை ஏற்படுமானால், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget