”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி என்று கண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போதிய பேருந்துகள் இல்லை
எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
"கிளாம்பாக்கம் பரிதாபங்கள்"
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை! இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா?
நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 7, 2025
கிளாம்பாக்கமே சாட்சி!
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை…
அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா? சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்:
வழக்கத்தைவிட கடந்த ஜுன் 5 நள்ளிரவு திடீரென பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவு குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் மக்கள் அதிகளவில் வர தொடங்கினர், மேலும் சுபக்முகூர்த்தம் தினம் என்பதாலும் பக்ரீத் விடுமுறை என்பதாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.





















