மேலும் அறிய

ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?

அதிமுக-வின் வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருவது அதிமுக-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தேர்தலில் போட்டியிட்டவர் ஆற்றல் அசோக்குமார். கோவையில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரான இவர் மீது தற்போது அடுத்தடுத்து மோசடி புகார்கள் பதிவாகி வருகிறது. 

ஆற்றல் அசோக்குமார் மீதான புகார் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? அவர் யார்? போன்ற தகவல்களை கீழே விரிவாக காணலாம். 

அம்பலமானது எப்படி?

கோவை மொடக்குறிச்சியில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தவர் ஆற்றல் அசோக்குமார். அவர் மீது பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பள்ளியின் நடவடிக்கைகளில் இருந்து அவரிடம் இருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இந்த சூழலில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பிற்காக பள்ளிக்கட்டணம் செலுத்த பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் சென்றுள்ளது. அந்த மின்னஞ்சலில் உள்ள வங்கிக்கணக்கிற்கு கட்டணத்தை செலுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 3 ஆயிரம் பெற்றோர்கள் மொத்தமாக ரூபாய் 40 கோடி கட்டணத்தை வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த வங்கிக்கணக்கில் சந்தேகம் அடைந்த சில பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போதுதான் இந்த வங்கிக்கணக்கு போலி என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எக்ஸலன்ஸ் என்ற அந்த வங்கிக்கணக்கு ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

அடுத்தடுத்து புகார்கள்:

இதையடுத்து, உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவசங்கரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். பின்னர், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் ஆற்றல் அசோக்குமார், கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகிய 6 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது பள்ளிக்கு வாங்கிய பேருந்துகளில் அசல் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதில் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆற்றல் அசோக்குமார் மீது 336 ( 3),  340 (2) 316 (2) ஆகிய பிரிவுகளில் கோவை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும், கடந்தாண்டு இறுதியில் ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது அந்த பள்ளியில் பணியாற்றிய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோனாலி கீத்தை மிரட்டிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் அவர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை அதிமுக-வில் ஏற்படுத்தியுள்ளது. 

யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?

ஆற்றல் அசாேக்குமாரின் அம்மா செளந்திரம் கடந்த 1991ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆற்றல் அசோக்குமார் கல்வியை முடித்த பிறகு அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். 

பின்னர், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பின்னர், தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் சரஸ்வதியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். தனது மாமியாருடன் இணைந்து பா.ஜ.க.வில் பணியாற்றிய அவர் தன்னையும், தனது ஆற்றல் அறக்கட்டளையும் முன்னிலைப்படுத்திக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். 

சொத்து மதிப்பு

அதிமுக வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட ஆற்றல் அசோக்குமார் தனது பெயரில் ரூபாய் 583 கோடிக்கு அசையும், அசையா சொத்துக்களும, தனது மனைவி பெயரில் ரூபாய் 69 கோடி அசையும், அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது அப்போது பெரும் பேசுபொருளானது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget