மேலும் அறிய

ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?

அதிமுக-வின் வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருவது அதிமுக-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தேர்தலில் போட்டியிட்டவர் ஆற்றல் அசோக்குமார். கோவையில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரான இவர் மீது தற்போது அடுத்தடுத்து மோசடி புகார்கள் பதிவாகி வருகிறது. 

ஆற்றல் அசோக்குமார் மீதான புகார் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? அவர் யார்? போன்ற தகவல்களை கீழே விரிவாக காணலாம். 

அம்பலமானது எப்படி?

கோவை மொடக்குறிச்சியில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தவர் ஆற்றல் அசோக்குமார். அவர் மீது பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பள்ளியின் நடவடிக்கைகளில் இருந்து அவரிடம் இருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இந்த சூழலில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பிற்காக பள்ளிக்கட்டணம் செலுத்த பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் சென்றுள்ளது. அந்த மின்னஞ்சலில் உள்ள வங்கிக்கணக்கிற்கு கட்டணத்தை செலுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 3 ஆயிரம் பெற்றோர்கள் மொத்தமாக ரூபாய் 40 கோடி கட்டணத்தை வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த வங்கிக்கணக்கில் சந்தேகம் அடைந்த சில பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போதுதான் இந்த வங்கிக்கணக்கு போலி என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எக்ஸலன்ஸ் என்ற அந்த வங்கிக்கணக்கு ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

அடுத்தடுத்து புகார்கள்:

இதையடுத்து, உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவசங்கரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். பின்னர், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் ஆற்றல் அசோக்குமார், கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகிய 6 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது பள்ளிக்கு வாங்கிய பேருந்துகளில் அசல் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதில் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆற்றல் அசோக்குமார் மீது 336 ( 3),  340 (2) 316 (2) ஆகிய பிரிவுகளில் கோவை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும், கடந்தாண்டு இறுதியில் ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது அந்த பள்ளியில் பணியாற்றிய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோனாலி கீத்தை மிரட்டிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் அவர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை அதிமுக-வில் ஏற்படுத்தியுள்ளது. 

யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?

ஆற்றல் அசாேக்குமாரின் அம்மா செளந்திரம் கடந்த 1991ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆற்றல் அசோக்குமார் கல்வியை முடித்த பிறகு அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். 

பின்னர், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பின்னர், தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் சரஸ்வதியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். தனது மாமியாருடன் இணைந்து பா.ஜ.க.வில் பணியாற்றிய அவர் தன்னையும், தனது ஆற்றல் அறக்கட்டளையும் முன்னிலைப்படுத்திக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். 

சொத்து மதிப்பு

அதிமுக வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட ஆற்றல் அசோக்குமார் தனது பெயரில் ரூபாய் 583 கோடிக்கு அசையும், அசையா சொத்துக்களும, தனது மனைவி பெயரில் ரூபாய் 69 கோடி அசையும், அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது அப்போது பெரும் பேசுபொருளானது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Embed widget