மேலும் அறிய

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்: எதற்காக தெரியுங்களா?

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி: திமுக மாநகராட்சி கவுன்சிலருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சி 57வது வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம். இவர் திமுகவில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வார்டுக்கு உட்பட்ட நல்லதண்ணீர் தெருவில் புதிதாக தார் சாலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும், சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும் இவருக்கு புகார் வந்தது. தொடர்ந்து சாலையை சேதப்படுத்திய பெண்களிடம் சென்று மாமன்ற கவுன்சிலர் என்ற முறையில் முத்துச்செல்வம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது அந்த பெண்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இதையடுத்து  சம்பந்தப்பட்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துசெல்வம் புகார் மனு அளிக்க சென்றார்.


திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்: எதற்காக தெரியுங்களா?

இங்குதான் இருக்கிறது டுவிஸ்ட்... திமுக கவுன்சிலருக்கு ஆதரவு தெரிவித்தும், ஆக்கிரமிப்பு செய்து சாலையை சேதப்படுத்திய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் என்று கூறிக் கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வெளியேற மறுப்பு தெரிவித்து மாநகர கவுன்சிலர்  முத்துசெல்வத்திற்கு ஆதரவாக நாங்களும் புகார் கொடுக்க வந்துள்ளோம் என போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் காவல் ஆணையர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.

தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாநகர கவுன்சிலர் முத்துச்செல்வம் மட்டும் மாநகர ஆணையர் காமினி சந்தித்து புகார் மனுவை அளித்தார். இதை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் மாநகர கவுன்சிலர் முத்துச்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: 1986 இருந்து அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும் வழக்கு தொடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து வந்தார். 2018ல் அந்த இடம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் 2022-ல் அந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு அளிக்கப்பட்டது. பின்னர் 2023ல் இடத்தை ஆக்கிரமித்த நபர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆனால் அந்த வழக்கில் சர்வேயர் அளவெடுத்து அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டு கடந்த மாதம் 27ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.


திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்: எதற்காக தெரியுங்களா?

அதே நாள் மாலையில் புதிதாக அமைத்த சாலைகளை வழக்கு தொடுத்தவரின் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் சாலையை சேதப்படுத்தியதாக தெரிய வந்து அவர்களை நான் கண்டித்தேன். அவர்கள் தங்கள் வீட்டுக்குள் சென்று அங்கிருந்து கல்லை எடுத்து வீசியும் தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இது கடந்த மாதம் நடைபெற்றது.

ஆனால் கடந்த இரண்டு நாளைக்கு முன்பு இதுகுறித்த வீடியோவை வலைதளத்தில் பதிவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திராவிட மாடல் ஆட்சியா என்று பொய் தகவலை பரப்பினர். எனவே இதுகுறித்து திருச்சி மாநகராட்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget