மேலும் அறிய

Thiruvarur: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் மோசடி; தலைமறைவாக இருந்த நபர் கைது

வங்கியின் கணக்குகள் தணிக்கையின் போது கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 200 ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தானராமன் 2018 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் நீடாமங்கலம் கீழத்தெருவில் வசித்துவரும் சந்தானராமன் (51), (இவருக்கு கே.எஸ்.கிருஷ்ணா என மற்றொரு பெயரும் உண்டு). இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தராக ஒரத்தூரைச் சேர்ந்த வீரக்குமார், அதே ஊரைச்சேர்ந்த உரவிற்பனையாளராக அன்பழகன், நகைமதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தவர் நீடாமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் ஆகும். இந்நிலையில் வங்கியின் கணக்குகள் தணிக்கையின் போது கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 200 ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தானராமன் துறைவாரி நடவடிக்கையில் 2018 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 4 பேர் மீதும் நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசாரிடம் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராமசுப்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

Thiruvarur: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் மோசடி;  தலைமறைவாக இருந்த நபர் கைது
 
புகாரில் உள்ள 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதில் சந்தானராமன் 15 லட்சத்து 72 ஆயிரத்து 593 ரூபாய் ரொக்கம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். எஞ்ஜிய தொகையை மற்ற ஊழியர்கள் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் எனவும் மேலும் சில நிபந்தனைகளையும் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதனையடுத்து 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். நீதிபதியின் தீர்ப்பை மதித்து எழுத்தர் வீரக்குமார், அன்பழகன், ஜெயராமன் ஆகியோர் நடந்து கொண்டனர். அதேசமயம் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மதிக்காமல் நீதிமன்றம் விதித்த டெபாசிட் தொகையை செலுத்தாமல் சந்தானராமன் தலைமறைவாக இருந்தார். இது குறித்து நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Thiruvarur: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் மோசடி;  தலைமறைவாக இருந்த நபர் கைது
 
இதனை விசாரித்த நீதிமன்றம் சந்தானராமனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சந்தானராமனை நாகப்பட்டினம் போலீசார் சென்னையில் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தானராமன் நீடாமங்கலம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீடாமங்கலம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி வரும் 27 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சந்தானராமன் மன்னார்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.