மேலும் அறிய

TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இந்த வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற உள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள  நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழைப்பொழிவு அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கத்தை விட அதிகளவு மழை:

ஏற்கனவே அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை மற்றும் மிக கனமழை பல மாவட்டங்களில் பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தமாக 77.5 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 52.4 மி.மீட்டர் மழையே பதிவாகும். ஆனால், வழக்கத்தை விட அதிகமாக இந்த காலகட்டத்தில் மழை பதிவாகியுள்ளது. இயல்பில் இருந்து 48 சதவீதம் மழை அதிகளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:

நடப்பாண்டிற்கான வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவு இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்நிலைகளின் நீர்மட்டத்தை கண்காணிப்பதுடன் அதன் கரைப்பகுதிகளை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த மட்டில் வரும் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவு அதிகளவு இருக்கும் என்பதாலும், சென்னை மாநகராட்சி மழைநீரை வெளியேற்றும் இயந்திரங்கள், படகுகள் ஆகியவற்றை தயார் நிலையில் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
Embed widget