மேலும் அறிய

CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?

சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுகவிற்கு நன்றி தெரிவித்தார். அது எதற்காக என்று தெரியுமா.?

சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று மானியக் கோரிக்கையின் போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போது, அதிமுகவிற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து விளக்கம்

பேரவையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026-ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக, இந்தியாவிலேயே முதன் முதலாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த 14.02.2024 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்.

தொடர்ந்து அடுத்தகட்டமாக, கடந்த 5-ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை 2030-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தில் அதற்குரிய அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடந்த 22-ம் தேதி சென்னையில் நடைபெற்றதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட மற்ற மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் குறித்து குறிப்பிட்டார் முதலமைச்சர்.

தொடர்ந்து, அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குறிப்பிட்ட முதலமைச்சர், 1971-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படாத வகையில், உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூட்டத்தில் பங்கேற் மாநிலங்களின் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே, கூட்டுக் குழுவின் சார்பாக பிரதமரை சந்தித்து, கடிதம் அளித்து முறையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.

கூட்டு நடவடிக்கைக் குழுவின் இந்த முன்னெடுப்புக்கு துணை நின்ற தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும், மற்ற கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

 

 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget