Youtuber Maridhas Arrested | மதுரையில் யூ ட்யூபர் மாரிதாஸ் கைது..
மாரிதாஸ், மதுரையில் உள்ள அவரது வீட்டில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

தலைமை தளபதி மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஏற்கெனவெ தனியார் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பதும், அதன் காரணமாக அவர்கள் பணி விலக்கம் செய்யப்பட்டதும், விலகியதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். தற்போது, பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான சரவணன் உள்பட பலரும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது
Correction | Tamil Nadu: A YouTuber, Maridhas has been arrested in Madurai for posting an alleged defamatory tweet, says Madurai City Police Commissioner
— ANI (@ANI) December 9, 2021
Details awaited. pic.twitter.com/2CvqbHVbqb
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

