மேலும் அறிய

மதுரை கனிம வளக் கொள்ளை ; ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை... ஆட்சியருக்கு வந்த கடிதம் !

தனி கவனம் செலுத்தி மண் மற்றும் கல்குவாரியில் முறைப்படுத்தி சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் கல்குவாரி, மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பெர்மிட் மூலம் சட்ட விரோதமாக மண்வளம் சுரண்டல் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது..," மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளதை தாங்கள் நன்றாக அறிவீர்கள். அதில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள், மணல் குவாரிகளில் தொடர்ந்து அரசு அனுமதித்த அளவை விட அதிகமான அளவு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
 
போலி ரசிது - போலி பெர்மிட்
 
குறிப்பாக திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதியில் மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பிரமிட் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் மண்வளத்தை சுரண்டுதல் நடைபெற்று வருகிறது. இந்த சட்ட விரோத கல்குவாரிகள், மணல்குவாரிகளை தாங்கள் உரிய முறையில் ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு நடத்தி  கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவீர்கள் என, மதுரை மக்கள் தாங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நாங்களும் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் உயிர் பலி ஏற்பட்டதே, அதேபோல உயிர்பலி மதுரையில் நடைபெறக் கூடாது. அதை தாங்கள் இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துவீர்கள் என மதுரை மாவட்ட மக்கள் தங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
 
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
நேற்று கூட திருமங்கலம்தொகுதி, திருமங்கலம் ஒன்றியம் புதுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் போலி ரசீது வைத்துக்கொண்டு கனிவளக் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்திட மக்கள் என்னிடத்தில் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்கள். மேலும் கனிமவளம் தொடர் கொள்ளையாக நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் இது குறித்து, சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் அவர்களிடமும் கோரிக்கை வைத்து சட்டப்பேரவையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், சிறப்பு தனிக்கவனம் செலுத்தி மண் மட்டும் கல்குவாரிகளை முறைப்படுத்தி, சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
Madurai Power Shutdown ; மேலூர் மின்தடை: 18.07.2026 உங்க ஏரியாவும் உள்ளதா என செக்பண்ணவும் !
Madurai Power Shutdown ; மேலூர் மின்தடை: 18.07.2026 உங்க ஏரியாவும் உள்ளதா என செக்பண்ணவும் !
சிவகங்கை: நீர்நிலைகளில் இலவச வண்டல் - களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!
சிவகங்கை: நீர்நிலைகளில் இலவச வண்டல் - களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget