மேலும் அறிய

அடிச்சது லக்கு.. வங்கி கணக்கில் தவறாக விழுந்த 820 கோடி ரூபாய்.. ஷாக்கான வாடிக்கையாளர்கள்

யூசிஓ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கி கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

அதிர்ஷ்டம் இருந்தால் ஏழைக்கூட பணக்காரன் ஆவான், இல்லை என்றால் கோட்டையில் இருப்பவன்கூட தெருக்கோடிக்கு வரலாம். அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என பல பலமொழிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிர்ஷ்டம் வந்துவிட்டால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் கூட நடக்கலாம்.

வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் தவறாக விழுந்த பணம்:

அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது நடந்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பணம் தவறாக டெபாசிட் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவருது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆன சம்பவம மக்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. பின்னர், அது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கி கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த பணம், தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணத்தை திருப்பி எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக் செய்ய முயற்சியா?

வங்கி கணக்குகளில் தவறாக விழுந்த 820 கோடி ரூபாயில் இதுவரை, 649 கோடி ரூபாய் திருப்பி எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணம் விழுந்த வாடிக்கையாளர்களின் கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது. மனித தவறின் காரணமாக பணம் தவறாக விழுந்ததா அல்லது யாரேனும் ஹேக் செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து வங்கி விளக்கம் அளிக்கவில்லை.

உடனடி பணம் செலுத்தும் சேவையின் (IMPS) மூலம்தான் இந்த பணம் மாற்றப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சேவை வருகிறது. நிகழ்நேரத்தில் எந்த வித தலையீடும் இன்றி, நேரடியாக நடக்கும் பண பரிமாற்றமே IMPS என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி தரப்பு அளித்த விளக்கத்தில், "மீதமிருக்கும் 171 கோடி ரூபாயை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10 முதல் 13 வரையிலான காலகட்டத்தில், ஐஎம்பிஎஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால் தொடங்கப்பட்ட சில பரிவர்த்தனைகள், யூகோ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணமாக வந்து சேர்ந்துள்ளது. 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது யூசிஓ வங்கி.

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த வங்கியின் நிகர லாபம் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.                     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
Embed widget