மேலும் அறிய

2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப் பட்டியல் எண்ணிக்கை ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என இந்தியப் பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு:

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப் பட்டியல் எண்ணிக்கை ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும், இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனவும் இது முதல் கட்டத்தின் தொடக்கம் என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று கூறினார்.

அதற்கு முன் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் நியமனம் மற்றும் அவர்களிடையே பணிப் பகிர்வு ஆகியவை மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது/

எத்தனை கட்டமாக நடைப்பெறும்?

மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்டத்தில் - முதல் கட்டத்தில் வீட்டுப் பட்டியல் நடவடிக்கை (HLO), ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து சேகரிக்கப்படும். 

இரண்டாம் கட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் (PE), ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும், இது பிப்ரவரி 1, 2027 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்:

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, 34 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதுவரை இந்தியாவில் 16  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு:

நடைப்பெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு  டிஜிட்டல் முறையில் மொபைல் மூலம் நடத்தப்பட உள்ளது. மேலும்  சுய கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்குக் கிடைக்கும்.  இந்த மக்கள் தொகைக்கணக்கெடுப்புக்கு மக்களிடம் கேட்க சுமார் முப்பது கேள்விகளைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?

இந்த கணக்கெடுப்பில் , தொலைபேசிகள், இணையத்தள வசதி, வாகனங்கள் (சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்கள் (ரேடியோ, டிவி, டிரான்சிஸ்டர்) போன்றவற்றின் உரிமை குறித்து வீடுகளிடம் கேட்கும்.

தானிய பயன்பாடு, குடிநீர் மற்றும் மின்சாரம், கழிப்பறைகளின் வகை, கழிவுநீர் அகற்றல் குறித்தும், குளியல் மற்றும் சமையலறை வசதிகள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் மற்றும் LPG/PNG இணைப்பு குறித்தும் மக்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.

வீட்டின் தரை, சுவர்கள் மற்றும் மேல்தளத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதன் நிலை, குடியிருப்பவர்களின் எண்ணிக்கை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதிகளின்  தகவல் மற்றும் வீட்டுத் தலைவர் ஒரு பெண்ணா அல்லது பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து கூடுதல் கேள்விகளும் இதில்  அடங்கும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Top 10 News Headlines: தவெகவில் நிகழும் மாற்றம்.. வங்கியில் புது வசதி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: தவெகவில் நிகழும் மாற்றம்.. வங்கியில் புது வசதி.. 11 மணி செய்திகள் இதோ!
மார்ச் 31 - ஏப்ரல் 3 வரை வங்கிகள் மூடல்! உங்கள் சம்பளம் சரியான நேரத்திற்கு வருமா? வராதா? முழு விவரம்
மார்ச் 31 - ஏப்ரல் 3 வரை வங்கிகள் மூடல்! உங்கள் சம்பளம் சரியான நேரத்திற்கு வருமா? வராதா? முழு விவரம்
UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!
UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Iran Attack US Firms: “உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
“உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
Embed widget