Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Train Ticketing Rules: இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு நடைமுறையில், மூன்று முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

Train Ticketing Rules: இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு நடைமுறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே நிர்வாகம்:
இந்திய ரயில்வே நிர்வாகத்தின் டிக்கெட் நடைமுறைகள் முற்றிலுமாக திருத்தி அமைக்கப்பட உள்ளன. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், ரிசர்வேஷன் அமைப்பில் மூன்று முக்கிய மாற்றங்களை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய நடைமுறை, காத்திருப்பு பயணிகளுக்காக முன்கூட்டியே பதிவு செய்த பயணிகளின் பட்டியல் மற்றும் பயணிகளுக்கான ரிசர்வேஷன் சிஸ்டமில் ஒட்டுமொத்த மாற்றம் ஆகியவை அடங்கும். பயணிகளின் வசதி, ரயில் பயணம் முழுவதும் தடையற்றதாகவும், இனிமையானதாகவும் அனுபவிப்பதை உறுதி செய்யும் நோக்கிலுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் பட்டியல்:
- தற்போதைய சூழலில் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக, முன் பதிவு செய்த பயணிகளின் பட்டியலை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த கடைசி நேர தகவல், குறிப்பாக அருகிலுள்ள இடங்களிலிருந்து தங்களுக்கான ரயில்களில் ஏறுபவர்களைப் பாதிக்கிறது.
- இந்த பிரச்னைக்கு மாற்றாக ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்தவர்களின் விவரங்களை வெளியிடும் புதிய திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
- உதாரணமாக இன்றைய நாளின் 2 மணிக்கு முன்பாக புறப்படும் ரயிலுக்கான பயணிகளின் பட்டியலில் முந்தைய நாளின் இரவு 9 மணியளவிலேயே இறுதி செய்யப்படும்
- படிப்படியாக புதிய நடவடிக்கையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
- இதன் மூலம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கொண்டிருப்பவர்களுக்கான அப்டேடட் தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கும், பயணங்களும் எளிதாகும்
- புதிய நடைமுறை தொலைதூரப் பகுதிகள் அல்லது நகரப் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நீண்ட தூர ரயில்களில் ஏறத் திட்டமிடுவதில் உதவியாக இருக்கும். கூடுதலாக, காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால், மாற்றுப் பயண ஏற்பாடுகளைத் திட்டமிட பயணிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.
வெரிஃபைட் பயனர்களுக்கே தட்கல் டிக்கெட்:
- வரும் ஜுலை 1ம் தேதி முதல் வெரிஃபைட் பயனர்கள் மட்டுமே, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
- கூடுதலாக தட்கல் டிக்கெட்டிற்கு ஒடிபி அடிப்படையிலான உறுதிபடுத்துதல் நடவடிக்கையும் ஜுலை மாத இறுதி முதல் அமலுக்கு வரவுள்ளது
- தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான உறுதிபடுத்துதல் நடவடிக்கையை விரிவுபடுத்தவும் ரயில்வே அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
- டிஜிலாக்கர் கணக்குகளில் சேமிக்கப்பட்ட ஆதார் அல்லது ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கொண்டு பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்
- முன்னதாக ஆதார் உறுதிப்படுத்துதல் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் ஆவணங்களும் அடையாள உறுதிப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுகின்றன.
புதிய ரிசர்வேஷன் நடைமுறை:
நடப்பாண்டு இறுதிக்குள் புதிய ரிசர்வேஷன் நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் மூலம்,
- நவீனமயமாக்கப்பட்ட நடைமுறை நிமிடத்திற்கு 1,50,000 டிக்கெட் முன்பதிவுகளை வழங்கும். இது தற்போதைய நிமிடத்திற்கு 32,000 டிக்கெட்டுகளிலிருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது
- இந்த அமைப்பின் விசாரணை செயலாக்க திறன் பத்து மடங்கு மேம்பாட்டைக் காணும். நிமிடத்திற்கு 4,00,000 இலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான விசாரணைகளாக விரிவடையும்.
- மேம்படுத்தப்பட்ட ரிசர்வேஷன் சிஸ்டமானது முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்கு பல மொழிகளை ஆதரிக்கும் பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்டுள்ளது
- மேம்படுத்தப்பட்ட அமைப்பு பயனர்கள் இருக்கை விருப்பங்களைக் குறிப்பிடவும், கட்டண நாட்காட்டிகளைப் பார்க்கவும் உதவுகிறது. கூடுதலாக, இது திவ்யாங்ஜனர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பிற குறிப்பிட்ட பிரிவுகளுக்கான பிரத்யேக வசதிகளையும் கொண்டிருக்கும்
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்























