மேலும் அறிய

அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?

அதிகமாக குழந்தைகள் வைத்திருக்கும் தம்பதியினருக்கு பரிசு தொகை அளிக்க உள்ளதாக அமைச்சர் ஒருவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மக்கள் தொகை மிகவும் அதிக வேறுபாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவு. மேலும் அங்கு அதிகளவில் பழங்குடியினர் மட்டுமே வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவான ஒன்று.  இந்தச் சூழலில் அப்பகுதியில் பல வெளி மாநிலத்தவர் வந்து பணிபுரிந்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழ தொடங்கின. 

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா ரோய்டே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவருடைய சட்டமன்ற தொகுதியில் அதிக குழந்தைகளை வைத்துள்ள தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தந்தையர் தினத்தன்று அவர் அறிவித்தார். மேலும் இப்பரிசு தொகையை அவருடைய குடும்பம் நடத்தும் வடகிழக்கு ஆலோசனை நிறுவனம் வழங்கும் என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?

ரோய்டே மிசோரத்தின் ஏஸ்வால்-கிழக்கு-II தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகி உள்ளார். அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம் மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகைதான். ஏனென்றால் அந்த மாநிலத்தில் சராசரியாக ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் வெறும் 52 மக்களே வசித்து வருகின்றனர். இது இந்தியாவின் சராசரியான ஒரு கிலோ மீட்டருக்கு 382 மக்கள் என்பதை விட மிகவும் குறைவான ஒன்று. 

வடகிழக்கு மாநிலங்களில் இதுபோன்ற அறிவிப்புகள் புதிதல்ல. இதற்கு முன்பாக அந்த மாநில மக்களைவிட வெளி மாநில மக்கள் அதிகளவில் இருப்பதை குறைக்க வேறு சில வட மாநிலங்களிலும் இதுபோன்ற அறிவிப்புகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேகாலயாவின் காசி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பகுதியில் 2017-ஆம் ஆண்டு அமேலியா சொஹ்டன் என்ற பெண்மணி 17 குழந்தைகளை பெற்றதற்காக 16000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் 15 குழந்தைகள் பெற்ற மற்றொரு பெண்ணிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டும் 2 குழந்தைகள் மேல் இருந்தால் அரசாங்க வேலை இல்லை என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆகவே அங்கு தவிர மற்ற எந்த மாநிலங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடு இல்லை. 


அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?

மேலும் இதுபோல் அதிக குழந்தைகளுக்கு பரிசு என்ற அறிவிப்புகளை பெண் உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக இது எத்தனை குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க உரிமையை பெண்ணிடம் இருந்து பறிக்கும் ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு என்று அவர்கள் கூறி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் குடும்ப கட்டுப்பாடு குறித்து அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் 1994ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படியும் இந்திய அரசு தன் மக்களை குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக கட்டாய உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இந்தியாவின் மூன்று மாநிலங்களில் தாக்கும் ஆபத்தான டெல்டா பிளஸ் கொரோனா வகை!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Embed widget