மேலும் அறிய

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க

"2025 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது அது குறித்து முழுமையான தகவல்கள் குறித்த கட்டுரை இதோ!"

விவசாயிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) - Pradhan Mantri Kisan Samman Nidhi

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணையாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பகுதி பெற முடியாது. 

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, விவசாய நிலச் சான்றிதழ் ஆகிய இரண்டு ஆவணங்கள் போதுமானது. கூடுதல் தகவல்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள, விவசாயத்துறை அலுவலகத்திற்குச் செல்லுங்கள். 

பயிர்க்கடன்கள்

விவசாயிகளின் கடன் தேவைகளுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிர் காப்பீட்டு திட்டம் 

இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க, அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அறிவிப்புகள், பருவத்திற்கு ஏற்றதைப் போல், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம்

விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்படுத்துவதை, மத்திய மற்றும் மாநில ஊக்குவித்து வருகின்றன. பவர் டிலர்கள் வாங்குவதற்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோன்று விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இலவச மின்சாரம் 

வருடம் தோறும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு சொந்தமாக கிணறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மானிய விலையில் நெல் 

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகள் வழங்கப்படுகிறது. அதேபோன்று ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயிர் வகைகள் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா - Pradhan Mantri Kisan MaanDhan Yojana (PM-KMY)  

இது விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம். அரசு மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் 60 வயதை அடைந்த பிறகு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 3000 ஓய்வூதியம் பெறுவார்கள். விவசாயிகளின் வயதை பொறுத்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்ட வேண்டும். விவசாயிகள் எவ்வளவு ரூபாய் கட்டுகிறார்களோ, அதே அளவு பணத்தை அரசு மாதம் தோறும் கட்டும். அதாவது கிட்டதட்ட 50 சதவீதம் மானியமாக வழங்குவதை போன்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பயன்பட முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி: இ-சேவை மையம் மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

 மண் சுகாதார அட்டை (SHC)

மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு பயிர் செய்ய இந்த திட்டம் உதவி செய்கிறது. மண்ணின் தேவைக்கேற்ப, உரம் பயன்படுத்த உதவி செய்கிறது. இதனால் மகசூல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

நமோ ட்ரோன் தீதி - Namo Drone Didi

பெண்கள் சுய உதவி குழுக்களை மேம்படுத்துவதற்காக, விவசாய துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், கிராமப்புற பெண்களுக்கு வருமானம் ஈட்டும் திட்டமாக இது இருக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்கப்படும். 80 சதவீதம் வரை மானியமாக பிரவுன்கள் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 8 லட்சம் வரை வழங்கப்படும்.

தலைப்பு செய்திகள்

மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான் என்ன? கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான்! கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget