மேலும் அறிய

போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!

காவல்துறையினர் மிகவும் மோசம் என்றும், காவல்நிலையங்களில் எது நடந்தாலும் நீதிமன்றத்திற்கு தெரியாது என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் தமிழ்நாடு முழுவதும் எழுப்பியுள்ளது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 

போலீஸ் மோசம்:

தந்தை மகன் இறப்பு, அஜித்குமா் மரணம் என எதற்குமே எந்த முதலமைச்சரும் பொறுப்பு ஏற்கமாட்டார்கள். போலீசாருக்கு அணுகுமுறை மிகவும் முக்கியம். தற்போது நரி போல போலீசாரை கடித்து குதறுகிறார்கள். போலீஸ் துறை தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. போலீசாரின் செயல்பாடுகள் மிகவும் மோசம். 

காவல் நிலையங்களில் எது நடந்தாலும் நீதிமன்றத்திற்கு தெரியாமல் நடக்கிறது. சிஎஸ்ஐஆர் நடைமுறையை ஒழிக்க நீதிமன்றம் முன்வர வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரியல் எஸ்டேட்டில் இறங்கி விட்டனர். அவர்களை எதிர்ப்பவர்களை  மிரட்ட ஆரம்பிக்கப்பட்டதே தனிப்படை. 

கோயிலின் உள்ளே கொலை:

சிஎஸ்ஐஆர் , நடைமுறையை ஒழித்தால்தான் இத்தகையை சம்பவங்கள் ஒழியும். கோயிலின் உள்ளே கொலை நடக்கிறது. அறநிலையத்துறையினர் எங்கே சென்றனர்?

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார். 

லாக்கப் மரணங்கள்:

ஐஜியாக காவல்துறையில் பொறுப்பு வகித்த பொன்.மாணிக்கவேல் பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்.  சுமார் 25 ஆண்டுகள் காவல்துறையில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியே போலீசாரின் இந்த அணுகுமுறை மோசம் என்றும், தனிப்படைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டது என்றும் பேசியிருப்பது மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் உண்டாக்கியுள்ளது.

மக்கள் அதிர்ச்சி:

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இதுவரை நடந்த ஆட்சிகளில் ஏராளமான லாக்கப் மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறியுள்ளது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மட்டும் காவல் நிலையங்களிலும், காவல்துறை விசாரணையாலும் 25 மரணங்கள் அரங்கேறியிருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காவல்துறையினருக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது திமுக ஆட்சியில் அஜித்குமாரின் மரணம் எப்படி தமிழ்நாட்டை உலுக்கியுள்ளதோ, அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் எனும் தந்தை, மகன் போலீசார் விசாரணையில் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. மேலும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் பலருக்கும் காவல்துறையினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget