மேலும் அறிய

Cauvery Water: நாளை முதல் தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர்: ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை: கொந்தளிக்கும் கர்நாடாகா

காவிரியில் இருந்து நாளை முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கனஅடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து நாளை முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.  

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. நேற்றைய  கூட்டத்தில் இதற்கு மேல் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது, இதனால் கர்நாடகாவில் உள்ள 161 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக கர்நாடகா அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மாதாந்திர தண்ணீர் அளவை வழங்கவில்லை. இதனை வழங்க உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும். அதன்படி 12,500 கனடி நீரை காவிரியில் தமிழகத்துக்கு திறக்க உத்தரவிட வேண்டும்'' என தமிழ்நாடு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு கர்நாடகா அரசு தரப்பில் தற்போது கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறப்பட்டது. காரசார விவாதங்களால் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று குழு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதில் நாளை முதல் (செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15  ஆம் தேதி வரை) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் 3000 கனஅடி நீர் கிடைக்கும்படி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இதனால் கர்நாடகா அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனக் கூறி கர்நாடகா மாநிலம முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும் அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.

Manipur Issue: அடங்காத வன்முறை.. மணிப்பூரில் மாணவர்கள் கடத்திக் கொலை - பள்ளிகளை மூட அரசு உத்தரவு, இணைய சேவை ரத்து

India - Bharat Row: ஐ.நா கூட்டத்தில் இந்தியாவுக்கு பதில் பாரதம் - மத்திய அமைச்சர் பேசியது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Trichy-Bahrain Flight:  திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? -  விரைவில் வருதாம் புதிய விமான சேவை
திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.