மேலும் அறிய

Manipur Issue: அடங்காத வன்முறை.. மணிப்பூரில் மாணவர்கள் கடத்திக் கொலை - பள்ளிகளை மூட அரசு உத்தரவு, இணைய சேவை ரத்து

மணிப்பூரில் மாணவர்கள் இரண்டு பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

மணிப்பூரில் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டதால் மீண்டும் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, 29ம் தேதி வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மெய்தி - குக்கி சமூகத்தினரிடையே தொடரும் மோதல்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜகவின் பிரைன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் கடந்த மே மாதம் பேரணி சென்ற போது கலவரம் வெடித்தது. அது பெரும் வன்முறையாகவும் மாறி தற்போது வரை நடந்து வருகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், அதிகப்படியாக குக்கி இன மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு இயல்பு நிலையை மீட்டு எடுக்கும் நோக்கில், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இணைய சேவையும் நீண்ட நாட்களாக துண்டிக்கப்பட்டு இருந்தது. அண்மையில் தான் மீண்டும் வழங்கப்பட்டது.

மாணவர்கள் கடத்திக் கொலை:

இதனால், மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புவதாக கருதப்பட்டது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக மாணவர்கள் இரண்டு பேர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ந்தேதி குக்கி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவர்களை தேடி வந்தனர். இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்து இருந்தனர்.  இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் அண்மையில் வெளியாகின. அவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெடிக்கும் போராட்டங்கள்:

இந்த சம்பவத்தை கண்டித்து மெய்தி இன மக்கள் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் குவிந்துள்ளனர். மாணவர் அமைப்பினர் பேரணிகளிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இம்பாலின் பல்வேறு இடங்களில் நடந்த பேரணியின்போது, மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது. இதனால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதோடு, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார். இதில், 45 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பள்ளிகளை மூட உத்தரவு:

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூர் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி இரவும் 7.45 மணி வரையில் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வரும் வெள்ளிக்கிழமை வரை மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூடவும், மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget