மேலும் அறிய

Rahul Gandhi : "பணம் மறைவதில்லை.. ஐந்தாறு பேரின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது.." : ராகுல் காந்தி கடும் விமர்சனம்..

"இந்திய ஒற்றுமை நடைபயணம், ஒவ்வொரு அநீதிக்கும் எதிரானது" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கினார். 

முதல் மூன்று நாட்கள் அவர் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடினார். நடைபயணம் 19ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், 419 கிமீ தூரத்தை பயணம் திங்கள்கிழமை மாலை அடைந்தது.

கொப்பம் பகுதியில் நடைபயணத்திற்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் அல்லது சிறு வணிகர்கள் கடன் செலுத்தாததற்காக தண்டிக்கப்படும் அதே வேளையில் பணக்கார வணிகர்களின் கோடி கணக்கில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது போன்ற அநீதிகளுக்கு எதிராக இந்தப் பாத யாத்திரை நடைபெறுகிறது.

மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. அதே நேரத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிற வணிகர்களுக்கு அதே அக்கறை காட்டுவதில்லை. இந்திய ஒற்றுமை நடைபயணத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் பிளவுப்படுத்த விரும்புகிறது. இரண்டுமே வெறுப்பை பரப்பி வருகிறது.

பாஜக - ஆர்எஸ்எஸ், இந்த நதியை (நடைபயணம்) பிரிக்க விரும்புகிறது. இங்கிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்ள விரும்புகிறது. யாராவது விழுந்தால், யாரும் தூக்கிச் செல்லாத, அனைவரும் தனியாக இருக்கும் நதியை அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டை பிளவுபடுத்தி வெறுப்பை பரப்புகிறார்கள்" என்றார்.

ராகுல் காந்தியை பார்ப்பதற்கு அலைகடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "எல்பிஜி சிலிண்டர்களை வாங்கும் போதோ அல்லது வாகனங்களில் எரிபொருளை நிரப்பும் போதோ, கூடுதல் கட்டணம் எங்கே போகிறது என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பணம் மறைவதில்லை. நாட்டின் பணக்கார தொழிலதிபர்கள் ஐந்தாறு பேரின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது. இந்த அநியாயத்தை ஏற்க மாட்டோம்" என்றார். பின்னர், ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், "இன்று பெரும் தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு விவசாயியோ அல்லது சிறு வியாபாரியோ சிறு கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவரை தவறானவர் என்று கூறி சிறையில் அடைக்கிறார்.

இந்திய ஒற்றுமை நடைபயணம், ஒவ்வொரு அநீதிக்கும் எதிரானது. மன்னரின் இந்த 'இரண்டு இந்தியாவை' நாடு ஏற்காது" என பதிவிட்டுள்ளார். காங்கிரஸின் 3,570 கி.மீ., 150 நாள் நீண்ட நடைபயணம் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி, கேரளாவுக்குள் நுழைந்த நடைபயணம், அக்டோபர் 1ஆம் தேதி கர்நாடகாவில் நுழைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
Embed widget