மேலும் அறிய

’மறக்கப்பட்டது மருத்துவகுணம் கொண்ட ஆத்தூர் வெற்றிலை’ : விவசாயிகள் சொல்லும் வேதனைக்கதை

பாட்டிமார் கை வைத்தியத்தில் வெற்றிலை முக்கிய பங்காக இருந்தது. குழந்தைகளில் சளித் தொல்லைக்கு வெற்றிலை முக்கிய பங்குபெறுகிறது.

மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் வெற்றிலை, புகையிலை பொருட்களால் மறக்கப்பட்டது என வெற்றிலை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

’மறக்கப்பட்டது மருத்துவகுணம் கொண்ட ஆத்தூர் வெற்றிலை’ : விவசாயிகள் சொல்லும் வேதனைக்கதை
தமிழகத்தில் மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு தனிமவுசு உண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 1000 ஏக்கரில் செய்யப்பட்ட வெற்றிலை விவசாயம் தற்போது 400 ஏக்கரில் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெற்றிலை விவசாயத்தில் 2 ஆயிரம் ஈடுபட்டு உள்ளனர். ஆத்தூரில் இருந்து தமிழகம் மட்டுமல்ல ஜெய்ப்பூர், உத்திரபிரதேசத்தின் சில பகுதிகள், ஆந்திரா, மத்திய பிரதேசம் வரை தினந்தோறும் வெற்றிலை அனுப்பப்பட்டது. சீசன் காலங்களில் 5 ஆயிரம் கிலோ வெற்றிலையும் பிற நேரங்களில் 2 ஆயிரம் கிலோவும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி என பலவகை இருந்தாலும் நாட்டுக்கொடியே இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சலை பொறுத்து கொழுந்து, சக்கை, மாத்து, ராசி மற்றும் சன்னம் என தனித்தனி ரகங்களாக பிரிக்கப்படுகிறது. அகத்தியில் வெற்றிலை கொடி, முருங்கையில் கொடி படர்வதாலும் ஆமணக்கு, முள்முருங்கை வேலி பயிராக இருப்பதால் பூச்சி தாக்குதல் இருக்காது. 

’மறக்கப்பட்டது மருத்துவகுணம் கொண்ட ஆத்தூர் வெற்றிலை’ : விவசாயிகள் சொல்லும் வேதனைக்கதை
பாட்டிமார் கை வைத்தியத்தில் வெற்றிலை முக்கிய பங்காக இருந்தது. குழந்தைகளில் சளி தொல்லைக்கு வெற்றிலை முக்கிய பங்குபெறுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெற்றிலை,  குழந்தைகளின் மார்புச்சளிக்கு வெற்றிலையை விளக்கில் சூடுபடுத்தி, மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுக்க சளித்தொல்லை குறையும், நுரையீரல் தொற்றுக்கு வெற்றிலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து பருகினால் நோய் குறையும், குழந்தையின்மைக்கு வெற்றிலை கொடியின் வேர் பகுதி பயன்படுவதாக நம்பப்படுகிறது.
 
 சர்க்கரை நோய்க்கு இரண்டு வெற்றிலையுடன் ஒரு கைப்பிடி வேப்பிலை, கைப்பிடி அருகம்புல் மண்சட்டியில் 500 மிலி தண்ணீரில் போட்டு 150 மிலி ஆகும் வரை  கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி ஒரு வேளைக்கு 50 மில்லி அருந்திவர நோய் தீரும். நீர் பெருக்கத்திற்கு வெற்றிலை சாருடன் பால் கலந்து அருந்தி வர சிறுநீர் நன்றாக பிரியும், தாய்ப்பால் சுரக்க  வெற்றிலை முக்கியமாக இருக்கிறது என நம்பப்படுகிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்டதாக பெரும்பான்மையினரால் நம்பப்படும் வெற்றிலையின் பயன்பாடு குறைந்து வருகிறது.
 
தற்போது இளைஞர்கள் முதல் அனைவரிடமும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக இந்தப்பழக்கம் குறைந்து வருவதாக கூறும் விவசாயிகள், திருமண விழாக்களில் தாம்பூல அழைப்பு விடுக்கப்படும் முறை இருந்தது. தற்போது அதுவும் முற்றிலும் மறைந்து போனதாக கூறும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க எழுத்தர் சுப்பிரமணியம், அஜீரணம் முதல் அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக விளங்கும் வெற்றிலை, விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகித்தது. நாளடைவில் திருமண நிகழ்ச்சியில் பஞ்சு மிட்டாயும் ஐஸ்க்ரீமும் முக்கியத்துவம் பெறுவது வருத்தம் அளிக்கிறது எனவும், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு (geographical Index) கிடைக்க வேண்டும் என்கின்றனர்.
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget