மேலும் அறிய

Russia Vs Trump: ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா

ட்ரம்ப்பிடம் பேசிக்கொண்டே, உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளார் ரஷ்ய அதிபர் புதின். இவருடன் பேசுவதில் எந்த பயணும் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது குறித்த முழு விவரங்களை காணலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசி வாயிலாக பேசிய போதும், புதின் எந்த விதத்திலும் வளைந்துகொடுக்காமல் பேசியதாக தெரிகிறது. மேலும், ட்ரம்ப்புடன் பேசி முடித்த உடனேயே, உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா நடத்தியதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

புதினுடன் பேசியதில் எந்த முன்னேற்றமும் இல்லை - ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று தொலைபேசியில் புதினிடம் நீண்ட நேரம் பேசிய நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், புதினிடம் மிக நீண்ட நேரம் பேசியதாக கூறியுள்ளார். நிறைய விஷயங்கள் குறித்து அவருடன் பேசியதாகவும், அப்போது உக்ரைன் போர் குறித்தும் பேசியதாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். புதினிடம் இன்று பேசியதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ரஷ்யா தரப்பு விளக்கம்

இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், கணிசமான அளவிலும் நடந்ததாகவும், உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதை புதின் மறுத்து விட்டதாகவும், புதினுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, போர் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தை சரி செய்யும் தங்கள் இலக்கை அடையும் வரை, போரிலிருந்து பின்வாங்க மாட்டோம் என புதின் உறுதியாக தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், ராணுவப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும், இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என புதின் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கம் அமெரிக்கா

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து, முந்தைய ஜோ பைடன் அரசை விமர்சித்திருந்த ட்ரம்ப், அவர் தங்கள் நாட்டின் தேவைக்கே பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நாட்டின் தேவைக்கு வைத்துக்கொண்டு, அதிகப்படியாக உள்ள ஆயுதங்களையே உக்ரைனுக்கு தங்கள் அரசு வழங்குவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களுக்கு உதவ நாங்கள் முயன்று வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.              

உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா

ட்ரம்ப் மற்றும் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது ரஷ்யா. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் புதின் தெலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, நாடு முழுவதும் வான்வழி எச்சரிக்கைகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரஷ்யா போரை நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது மிகப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால், அது போரை நிறுத்தாது என்பதற்கான சான்றுதான் இது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா மீது அமெரிக்கா இன்னமும் அதிக அளவிலான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget