மேலும் அறிய

Vijay Sethupathi: பாய்ஸ் மணிகண்டனை காப்பாத்தும் நோக்கம் எனக்கு இல்லை.. மகாராஜா பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விஜய் சேதுபதியின் 50 படமாக உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ள திரைப்படம் மகாராஜா’.  ’தி ரூட்’ நிறுவனம் - பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசியதாவது:

‘என்னை நம்பிய சீனு ராமசாமி’

நடிகர் விஜய்சேதுபதி, என் இயக்குநர், என் குருநாதர் சீனு ராமசாமி சாருக்கு நன்றி. அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும்போது, என்னை மாதிரி ஒரு ஆள, யாருமே நம்பாத, நானே நம்பாத ஒரு ஆளை வச்சு அந்தப் படத்தின் ஷூட்டிங்க முடிச்சது மிக ஆச்சர்யமான ஒரு விஷயம். அதுக்கு அவருக்கு நன்றி. எனக்கு நடிக்கவே தெரியாதபோது சி.ஜே. பாஸ்கர் எனக்கு சீரியல்ல வாய்ப்பு கொடுத்து, நான் துவண்டு போகும்போது ஒரு நாள் வந்து “உன் கண்ணும் சிரிப்பும் நடிக்கும்போது நல்லா இருக்கு, நீ நல்லா வருவ”னு சொன்னாரு. அவருக்கு நன்றி. எனக்கு உதவி செய்த நிறைய பேருக்கு நன்றி. இந்த 50 படங்களும் ஒரு மாலையாக இருந்தால், அதில் இருக்கும் ஒவ்வொரு மணியும் இங்க இருக்க அத்தனை பேராலும் அது கோர்க்கப்பட்டிருக்கிறது.  என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுகள் என அனைத்தும் என்னை யோசிக்க தான் வைத்தன.

பாய்ஸ் மணிகண்டனின் நேர்க்காணல் 

துபாயில் நான் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஃபைவ் ஸ்டார் படத்துக்கும், பாய்ஸ் படத்துக்கும் ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் ஃபோட்டோ அனுப்பினேன். மணிகண்டனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவரது சமீபத்திய இண்டர்வியூவை நான் எதேச்சையாக பார்த்தேன்.  வருத்தம் என்னவென்றால், இனிமே இந்த வாழ்க்கை எவ்வளவு பயமுறுத்தினாலும் பயப்பட மாட்டேன்டா என ஒருவர் உணர்ந்தது போல் அந்த இண்டர்வியூ இருந்தது. பெரிய பூதம், பேய் என்றால் அது வாழ்க்கை தான்.

நேற்று இருந்த நொடி இன்று இல்லை. அந்த இண்டர்வியூ அவ்வளவு என்னை ஈர்த்தது. நான் உதவி பண்ணனும் இல்லை காப்பாத்தணும் எனும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. ரொம்ப சுவாரஸ்யமான நபராக இருந்தார். அதனால் இயக்குநரிடம் அவர் பற்றி சொன்னேன். திறமை இல்லாத யாரையும் வாய்ப்பு கொடுத்து வளர்க்க முடியாது. அது மாதிரி முயற்சி செய்து நான் தோற்றுப்போய் இருக்கிறேன். 

மணிகண்டனைப் பொறுத்தவரை வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதல் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் சந்தோஷம்” எனப் பேசியுள்ளார். 2014ஆம் ஆண்டு காதல் 2014 படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் அமையாமல் இருந்த பாய்ஸ் மணிகண்டன், சென்ற ஆண்டு தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்க்காணல் வைரலானது.  இந்நிலையில் பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் சென்ற ஆண்டு நடித்த அவர், தற்போது விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget