மேலும் அறிய

Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டில் வரி விலக்குகளுடன் புதிய வரி விதிப்பு முறை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட் மூலம் பழையை வரி விதிப்பு முறை, முற்றிலும் ஒழிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு:

2025-26 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதனிடயே, அதிக வரி விலக்கு வரம்பு, மேம்படுத்தப்பட்ட வரி அடுக்குகள் மற்றும் புதிய வரி முறையின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிலையான விலக்குக்கான கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் ஏராளமான வரி செலுத்துவோருக்கு பெரிதும் பயனளிக்கும். முந்தைய பட்ஜெட்டில், நிலையான விலக்கு ரூ. 50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது, புதிய வரிமுறையின் கீழ் விலக்கு வரம்பு தற்போது ரூ.3 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய வரிக்கு முழுக்கு:

எஸ்பிஐ வங்கியானது தனது பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளில், பழைய வரி முறையின் கீழ் உள்ள அனைத்து விலக்குகளையும் நீக்கி, வரி கட்டமைப்பை சீரமைக்க அனைவரையும் புதிய வரி முறைக்கு மாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. அதவாது அனைத்து 8.2 கோடி வரி செலுத்துபவர்களும் எளிமைப்படுத்தப்பட்ட முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று எஸ்பிஐ பரிந்துரைக்கிறது. இதன் மூலம் பழைய வரி முறை முற்றிலும் ரத்தாகும். அப்படி செய்தால், வரி இணக்கத்தை மேம்படுத்தவும், நுகர்வைத் தூண்டவும் முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி முன்மொழிகிறது. அதோடு, மூன்று சூழல்களை விலக்கி, அதனடிப்படையில் விலக்குகளை வழங்குவது குறித்தும் விவரித்துள்ளது. அவற்றை செயல்படுத்துவதால்  பயனாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கியின் பரிந்துரைகள்:

  • ஒருவேளை அதிகபட்ச வரி விகிதத்தை 25% ஆகக் குறைத்தால், அரசுக்கு ரூ.74,000 கோடி முதல் ரூ. 1.08 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.
  • அதிகபட்ச வரி விகிதத்தை 30 சதவிகிதமாக பராமரிப்பது மற்றும் ரூ.10-15 லட்ச வருவாய்க்கான வரி விகிதத்தை 15% ஆகக் குறைத்தால் ரூ.16,000 கோடி முதல் ரூ. 50,000 கோடி வரை இழப்பு ஏற்படும்.
  • அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 25 சதவிகிதமாகவு, ரூ.10 முதல் 15 லட்சம் வரையிலான வருவாய்க்கான வர் விகிதத்தை 15 சதவிகிதமாகவும் குறைத்து, விலக்குகளை சீரமைத்தால் அரசுக்கு ரூ.85,000 கோடி முதல் ரூ.1.19 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

பயனர்களுக்கான பலன்:

மேற்குறிப்பிடப்பட்டதில் இரண்டாவது அம்சமானது நிதிப் பொறுப்பு மற்றும் நுகர்வோருக்கான நன்மைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது. அதிகபட்ச வரி விகிதத்தை 30 சதவிகிதத்தில் வைத்திருப்பதன் மூலம், வருவாய் இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.14% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ. 34,500 முதல் ரூ. 1.15 லட்சம் வரையிலான வருடாந்திர சேமிப்பை வழங்குகிறது.

நிலையான பணவீக்கம் மற்றும் விலையுயர்ந்த உணவு செலவுகளை அனுபவித்த பிறகு, நகர்ப்புற இந்தியர்கள் செலவழிக்கக்கூடிய வருமானம் குறைவதைக் காண்கிறார்கள். நகர்ப்புறங்களில் தனியார் நுகர்வு குறைந்து வருவதாகத் தோன்றுகிறது. காரணம் சம்பளம் மற்றும் நடுத்தர வர்க்க தொழில் வல்லுநர்கள் தனிப்பட்ட வருமான வரிகளின் சுமை தங்கள் மீது குவிவதாக உணர்கிறார்கள். மேலும், நுகர்வோர் ஏற்கனவே அதிக அளவிலான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எதிர்கொள்வதாகவும் நம்புகின்றனர். 2025 பட்ஜெட்டில் சேமிப்பை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் செலவுகளின் சவால்களைச் சமாளிக்கவும், குறிப்பாக ஜிடிபி வீழ்ச்சியின் வெளிச்சத்தில் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று நாட்டின் நடுத்தர வர்க்கம் எதிர்பார்க்கிறது. எஸ்பிஐ வங்கியின் பரிந்துரைகள் செயல்பாட்டிற்கு வருமா? என்பதையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget