மேலும் அறிய

Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..! சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

kanchipuram Piravathaneswara Temple history : காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் 1300 வருட பழமையானது.

கோயில் நகரம் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும்,  காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவக்காஞ்சி  மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள்   சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம் உள்ள  பகுதியை, விஷ்ணு காஞ்சி ( சின்ன காஞ்சிபுரம் )  என்று அழைத்து வருகின்றனர் .

முக்தி தரும் ஏழு நகரங்கள்

அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி ,காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை  ஆகிய ஏழு நகரங்களும் முக்தி தரும்  நகரமாக  இந்து  மக்களால் நம்பப்படுகிறது.  அந்த வகையில் அவற்றில் காஞ்சிபுரம்   நகரமும் ஒன்று என்பதால்,  காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.

மகா சிவராத்திரி:

மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இப்போது முதலே சிவாலயங்களிலும் சிவ பக்தர்களும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நன்னாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்கி பூஜித்தால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.


Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..!  சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

300 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்:

நடப்பாண்டு வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரியானது 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ மகா சிவராத்திரி ஆகும். இந்த மகா சிவராத்திரியில் நான்கு யோகங்கள் ஒன்று கூட உள்ளது. அதாவது, சர்வார்த்த சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் மற்றும் சுக்கிர பிரதோஷம் இந்த மகா சிவராத்திரியில் ஒன்று கூட உள்ளது.

Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..!  சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

இதற்கு முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மகா சிவராத்திரியில் இந்த நான்கு யோகங்களும் ஒன்று கூடியதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு பின்பு, தற்போதுதான் இவை ஒன்று கூட உள்ளது.  சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியில். கோவிலுக்கு சிறப்பு மிக்க காஞ்சிபுரம் நகரத்தில், நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய கோயில்கள் குறித்து பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில்  குறித்து பார்க்கலாம்.

காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் - பிறவாத்தானம் 

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் 1300 வருட பழமையானது. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. வாம முனிவர் மறுபிறப்பு வேண்டாம் என்று வேண்டி பூஜித்த கோயிலாக காஞ்சி புராணத்தில் கூறப்படுகிறது. கஜ லட்சுமி, தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி, ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, ப்ரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என பல அழகிய சிற்பங்களும் கோயில் அமைப்பும் மிக சிறப்பானது.


Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..!  சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

வாமதேவ முனிவர் 

வேத காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் வேத காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும், வாமதேவ முனிவர் ( இவரது தந்தையின் பெயர் கௌதம முனிவர் ) பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார்  என்பது நம்பிக்கையாக உள்ளது. இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"  என வரம்  வரம் அளித்துள்ளார். வாமதேவ   முனிவரும்   இறைவன் வரம் கொடுத்ததின் அடிப்படையில் காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும்.  இதன் காரணமாக இந்த  கோயிலுக்கு பிறவாத்தானம் எனப்பட்டது.

 

 சிவராத்திரி அன்று  மட்டும்

 இக்கோயில்  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  தினமும் இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாததால்,  சமூகவிரோதிகள்  மூலம் கோயில்  சிதறமடைந்து விடக்கூடாது என்பதற்காக , கோயில் பூட்டிய உள்ளது. இக்கோவில் இருக்கும் இடம் காஞ்சிபுரத்தில் இருக்கும் பலருக்கு தெரியாது, என்பதே நிதர்சன உண்மை. இக்கோவிலில் இங்கு உள்ளது என்பதை குறிப்பிடும் வகையில், கோவில் பெயர் கொண்ட பலகை கூட  கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..!  சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

கடந்த சில ஆண்டுகளாக சிவராத்திரி அன்று மட்டும்,  தொல்லியல் துறை அனுமதியுடன்  வரலாற்று  ஆர்வலர்களும் , பக்தர்களும் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பிற நாட்களில்  கோவிலை பார்க்க விரும்பினால், தொல்லியல் துறை அனுமதியுடன்  செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு இருந்தால் சிவராத்திரி என்று சென்று இறைவனை தரிசித்து விட்டு வாருங்கள்.

அமைவிடம்

 பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ளது.  கோயிலுக்கு எதிரே இறவாதேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு சிறப்புமிக்க கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
MS Dhoni in IPL: அடுத்த ஐபிஎல் தொடரில் ‘தல‘ தோனி விளையாடுவாரா.? One Last Time... சிஎஸ்கே கொடுத்த அப்டேட் என்ன.?
அடுத்த ஐபிஎல் தொடரில் ‘தல‘ தோனி விளையாடுவாரா.? One Last Time... சிஎஸ்கே கொடுத்த அப்டேட் என்ன.?
Khawaja Asif Vs India: “இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pudukkottai plane Accident | சாலையில் தரையிறங்கிய விமானம்புதுக்கோட்டையில் பரபரப்பு விமானி பகீர்
Vaithilingam Joins DMK |
TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
MS Dhoni in IPL: அடுத்த ஐபிஎல் தொடரில் ‘தல‘ தோனி விளையாடுவாரா.? One Last Time... சிஎஸ்கே கொடுத்த அப்டேட் என்ன.?
அடுத்த ஐபிஎல் தொடரில் ‘தல‘ தோனி விளையாடுவாரா.? One Last Time... சிஎஸ்கே கொடுத்த அப்டேட் என்ன.?
Khawaja Asif Vs India: “இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
Embed widget