மேலும் அறிய

Watch Video: சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர்.. வாசலிலேயே காத்திருக்கும் செல்ல நாய்.. உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ

தன்னுடைய உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தெரியாமல் அவருக்காக நாய் ஒன்று காத்திருக்கும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

நம்முடைய வீட்டில் பலரும் வளர்க்க துடிக்கும் செல்ல பிராணிகளில் ஒன்று நாய். ஏனென்றால் அது அதிக நன்றி உள்ளம் கொண்டது என்ற கூற்று உள்ளது. அதற்கேற்ப சில செல்ல பிராணி நாய்கள் தங்களுடைய உரிமையாளர்களுடன் மிகவும் பாசமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மெக்சிகோ நாட்டில் லூர்ட்ஸ் மல்னான்டோ லோப்ஸ் என்ற பத்திரிகையாளர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். 69 வயதான இவருக்கு அவருடைய நாய் ஒரு நல்ல துணையாக இருந்து வந்துள்ளது. பத்திரிகையாளராக பணியாற்றியபோது இவர் சில முக்கியமான சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 

இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் கடந்த ஆண்டு மெக்சிகோ அதிபரிடமும் முறையிட்டார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் அதிபரிடம் அவர் முறையிட்டார். இந்தச் சூழலில் கடந்த வாரம் மெக்சிகோ நாட்டில் இருந்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


Watch Video: சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர்.. வாசலிலேயே காத்திருக்கும் செல்ல நாய்.. உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ

இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்த போது லோபஸை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் வெளியே சென்று தன்னுடைய உரிமையாளர் லோபஸ் வரும் வரை வீட்டின் வாசலில் அவருடைய நாய் காத்திருக்கும். அந்தவகையில் தற்போது தன்னுடைய உரிமையாளர் லோபஸ் கொலை செய்யப்பட்டது தெரியாமல் அவருடைய வருகைக்காக அந்த நாய் வீட்டில் வாசலில் படுத்து கொண்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். தன்னுடைய உரிமையாளரின் மறைவை பற்றி தெரியாமல் அந்த நாய் தவிப்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மெக்சிகோ கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வேகமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க: WHO தலைவராக மீண்டும் டெட்ரோஸ் அதோனோம்? டிவிட்டர் வாயிலாக நாமினேட் செய்த உலக சுகாதார நிறுவனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்..  அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்..  அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
CSK Rachin Ravindra Injured: சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
IND Vs ENG 2ND ODI: தொடரை வெல்லுமா இந்தியா? இன்று களமிறங்குவாரா கோலி? இங்கிலாந்து உடன் 2வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 2ND ODI: தொடரை வெல்லுமா இந்தியா? இன்று களமிறங்குவாரா கோலி? இங்கிலாந்து உடன் 2வது ஒருநாள் போட்டி
Embed widget