மேலும் அறிய

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி வழக்கில் மாணவியின் தாய் ஏ1 குற்றவாளியாகவும் 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மாணவியின் தாய் ஏ1 குற்றவாளியாகவும் 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளி  மாணவி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக cbcid சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 7ம் தேதி  விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி  மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பள்ளி உடமைகள் வாகனகள் திருடப்பட்டும், காவல்துறை வாகனங்களை தீவைத்து எரித்தும், சேதப்படுத்தியும், கால்நடைகளையும் திருடிச் சென்றனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு போன்றவற்றை நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தக் கலவர வழக்கை CBCID சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. 500க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீதும் என மொத்தம் 916 பேர் மீது, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை CBCID சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 666 பேர் மீது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும், 53 இளம் சிறார்களுக்கு எதிராக, சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும்

 மேலும் காவல்துறை பாதுகாப்பிற்காக, சேலத்தில் இருந்து வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற வழக்கில் 5 பேர் மீதும், 124 பேருக்கு எதிராக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை மிக விரைவில் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவியின் தாய் ஏ1 குற்றவாளி - 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி

மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி எனவும், 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தையை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இதுபோன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு அதிகமாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக ஏடுகள் இல்லை என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget