மேலும் அறிய

வழக்கறிஞர் எதிர்தரப்பால் வெட்டிக்கொலை.! போராட்டம்..! நெல்லையில் பரபரப்பு!

இடப்பிரச்சினை காரணமாக ஒரு தரப்பினரின் வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர் மற்றொரு தரப்பினரால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணராஜ். இவர் நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சார்ந்த ஜான் என்பவரின் இடப்பிரச்சனை சம்பந்தமாக வழக்குகள் நடத்தி வந்தார். இந்த நிலையில் வழக்கு சம்பந்தமான மற்றொரு பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்தில் பொக்கலைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் சரவணராஜனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணராஜ் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியும் 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் மாவட்ட நீதிமன்ற முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் காவல்துறை துணை ஆணையர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் சரவணன் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பாக செல்வம் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனின் கார் ஓட்டுனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இடப்பிரச்சினை காரணமாக ஒரு தரப்பினரின் வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர் ஒருவர் மற்றொரு தரப்பினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Metro Parking: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே.! இனி பார்க்கிங் பாஸ் கிடையாது...
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
ஈசிஆரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள்; வைரல் வீடியோ- நடந்தது என்ன? கண்டுபிடித்த காவல்துறை!
"இருக்கு! சம்பவம் இருக்கு" அஜித் படத்தில் ஐகானிக் இசை! அடித்துச் சொல்லும் ஜிவி பிரகாஷ்
Embed widget