Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
Chennai Power Cut(25-07-2025): சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 25-ம் தேதி, அதாவது நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாம்பரம்
மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளையம்மன் கோயில் தெரு.
எழும்பூர்
சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்ட்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே முதலி தெரு, சூளை பகுதி, கே.பி பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி மற்றும் ராகவா தெருவின் ஒரு பகுதி.
சோழிங்கநல்லூர் பிரிவு
சிட்லப்பாக்கம், வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் மெயின் ரோடு, பிஎஸ்சிபிஎல், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்ஜிஆர் நகர், பாசில் அவென்யூ, நூக்காம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், அரசன்களனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம், நூக்கம்பாளையம் ரோடு, மல்லீஸ் அபார்ட்மெண்ட், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மென்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாஸ் மற்றும் சௌமியா நகர்.
அலமாதி
கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், கர்லபாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், காரணை கிராமம், புதுக்குப்பம் கிராமம், வாணியன் சத்திரம், அயிலாச்சேரி கிராமம், குருவாயில் கிராமல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி கிராமம், ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் சாலை மற்றும் கொள்ளுமேடு சாலை.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.






















