மேலும் அறிய

சிகிச்சைக்கான முழு தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம்; ரூ.4.84 லட்சம் வழங்க அபராதம் விதித்த நீதிமன்றம்

உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை குலவணிக்கர்புரம் குறிச்சி மெயின் ரோட்டை சார்ந்தவர் சரோஜினி (வயது 48). இவர் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாதம் ரூபாய் 300/-  மருத்துவ காப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 02.09.2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 87% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவ சிகிச்சை கட்டணமாக ரூபாய் 7,34,066/- செலுத்தி உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் வழியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அதில் சிகிச்சைக்குரிய முழுத்தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.  அதன்பின் கருவூலக கணக்கு துறை காப்பீட்டு தொகை  வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த  நிலையில் 26.09.22 அன்று ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் வங்கி கணக்கில் காப்பீடு நிறுவனம் வழங்கியுள்ளது. மீத தொகையான ரூபாய் 4,54,066/- கேட்டு பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய சரோஜினி வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன்பின் அதிகமான வழக்குகள் இருந்ததால் இவரது வழக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின் அங்கு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் காப்பீடு நிறுவனம் செய்த முறையற்ற வாணிபம் சேவைகுறைப்பாடு என்பதால் ரூபாய் 4,54,066/-  வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூபாய் 25000/-ம், வழக்குச் செலவு ரூபாய் 5000/- சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Embed widget