மேலும் அறிய

சிகிச்சைக்கான முழு தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம்; ரூ.4.84 லட்சம் வழங்க அபராதம் விதித்த நீதிமன்றம்

உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை குலவணிக்கர்புரம் குறிச்சி மெயின் ரோட்டை சார்ந்தவர் சரோஜினி (வயது 48). இவர் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாதம் ரூபாய் 300/-  மருத்துவ காப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 02.09.2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 87% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவ சிகிச்சை கட்டணமாக ரூபாய் 7,34,066/- செலுத்தி உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் வழியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அதில் சிகிச்சைக்குரிய முழுத்தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.  அதன்பின் கருவூலக கணக்கு துறை காப்பீட்டு தொகை  வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த  நிலையில் 26.09.22 அன்று ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் வங்கி கணக்கில் காப்பீடு நிறுவனம் வழங்கியுள்ளது. மீத தொகையான ரூபாய் 4,54,066/- கேட்டு பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய சரோஜினி வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன்பின் அதிகமான வழக்குகள் இருந்ததால் இவரது வழக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின் அங்கு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் காப்பீடு நிறுவனம் செய்த முறையற்ற வாணிபம் சேவைகுறைப்பாடு என்பதால் ரூபாய் 4,54,066/-  வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூபாய் 25000/-ம், வழக்குச் செலவு ரூபாய் 5000/- சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget