மேலும் அறிய

”ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண்” இந்த காலத்திலும் இப்படி ஒரு பஞ்சாயத்தா..?

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்

இட பிரச்சனையால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்...  மாவட்ட ஆட்சியர் முன்பு கதறி அழுது மனு அளித்த பெண்.. உடனடியாக உத்தரவு போட்ட ஆட்சியர்.
 
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஓவரூர் வெள்ளகுளத்து தெருவை சேர்ந்த ராணி இவரது மகள் மாரியம்மாள் வயது 38 கடந்த 13 வருடங்களுக்கு முன்பு சுதாகர் என்பவரோடு காதல் திருமணம் செய்து ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.  இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மாரியம்மாள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தாயார் ராணி ஆகியோரும் அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் 
 
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அட்டூழியம்
 
ராணியின் மகனுக்கும் மாரியம்மாளுக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர் கிராம பஞ்சாயத்தார்கள் ஒரு பட்சமாக மாரியம்மாள் சகோதரருக்கு மட்டும் பேசி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிராம பஞ்சாயத்தார்கள் பன்னீர்செல்வம் செல்லதுரை கௌதமன் மன்மதராஜ் வேதையன் ஆகியோர் ராணி மற்றும் மாரியம்மாள் குடும்பதினரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும்  யாரும் இந்த குடும்பத்தினரிடம் பேசக்கூடாது. குடிநீர் எடுக்க கூடாது, திருவிழா,திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்கள். மேலும் மாரியம்மாள் குழந்தைகள் பள்ளியில் இருக்கும் நேரத்தில் கூட யாரும் பேசக்கூடாது என கூறியிருந்தனர்.
 
பட்டா தரமுடியாது என்ற ஊராட்சி
 
இந்த நிலையில் அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டகையில் வாழ்ந்து வருவதால் அந்த இடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் என இருந்த நிலையில் அந்த இடத்திற்கு பட்டா வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாரியம்மாள் கேட்டுள்ளார் அப்போது உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் பட்டா கொடுப்பதற்கு கையெழுத்து இட முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் கடந்த 28ஆம் தேதி அந்த கிராமத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் அந்த இறுதி நிகழ்ச்சிக்கு மாரியம்மாள் சென்றுள்ளார் அப்போது உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் நீங்கள் இங்கே வரக்கூடாது என கிராம பஞ்சாயத்தார்கள் சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து மாரியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாரியம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் முன்பு கிராம முக்கியஸ்தர்கள் இந்த ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுது மனு அளித்தார்.
 
உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
 
இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென உத்தரவிட்டார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.  ஊரை விட்டு ஒதுக்கிய காரணத்தினால் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Embed widget