மேலும் அறிய

Ganja Arrest: என்ன நடக்குது தமிழ்நாட்டில்..! தஞ்சையில் மொத்தமாக சிக்கிய 300 கிலோ கஞ்சா, போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்

Ganja Arrest: தஞ்சாவூரில் லாரியில் கடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ganja Arrest: தஞ்சாவூரில் லாரியில் வைத்து கடத்தி வரப்பட்ட, 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

300 கிலோ கஞ்சா பறிமுதல்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்,  அங்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு கஞ்சா மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது:

இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் இரண்டு வாகனங்களையும் சோதனை செய்ததில் ஆந்திராவில் இருந்து 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் கஞ்சா கடத்தி வந்த அண்ணாதுரை, தர்மராஜ் மற்றும் முத்தையா ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி வறப்பட்டது என பல்வேறு கோணங்களில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 10 பேர் கைது

கோவையில் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காள்வாய் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில்,  அவர் போதை மாத்திரைகளை விற்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் தந்த தகவல்களின் படி, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 10 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.

அச்சத்தில் பொதுமக்கள்:

தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வேட்டை என்ற பெயரில் பல சோதனைகளை நடத்தினாலும், கஞ்சா விற்பனைய் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டதாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை. குறிப்பாக இளைஞர்கள் இதுபோன்ற போதைப் பொருட்களுக்கு அதிகம் அடிமையாவதால், தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் நிலவுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
Embed widget