மேலும் அறிய

Karur: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்; கரூர் ஜவுளி நிறுவனங்களின் பொருட்கள் பாதிப்பு

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்திருக்கும் கரூர்  ஜவுளி நிறுவனங்கள். 

கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் சுமார் ரூ.6000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.   ஏற்றுமதியாகும் ஜவுளி பொருட்கள் தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. கரூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் துறைமுக கிடங்குகளில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் கிடங்குகளில்  மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து  ஜவுளி பொருட்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் நனைந்து தண்ணீரில் மூழ்கியது. இரண்டு நாட்களுக்கு இதைப் பற்றிய எந்த செய்தியும் கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு தெரியவில்லை. தொடர்ந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்  சங்க செயலாளர் சேதுபதி மற்றும் பல நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகளும் தூத்துக்குடிக்கு நேரில் சென்று கிடங்குகளையும் அதில் பாதிக்கப்பட்டுள்ள பொருட்களையும் ஆய்வு செய்தனர்.

 


Karur: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்; கரூர் ஜவுளி நிறுவனங்களின் பொருட்கள் பாதிப்பு

கரூர் ஜவுளி நிறுவனங்களின் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் சுமார் ரூ.25 கோடி அளவிற்கு தூத்துக்குடியில் உள்ள பல கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சரக்குகளில் பெரும்பாலான சரக்குகள் மழை  மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கிடங்குகளின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு,  கிடங்குகளில் செய்யப்பட்டிருக்கும் காப்பீடுகள் பற்றி தெரிந்து கொண்டு, காப்பீடு நிறுவனங்களின் ஆய்வு உடனடியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கிடங்குகளின் மூலம் செய்யப்பட்டிருக்கும் காப்பீட்டு நிறுவனங்களின் ஆய்வு நிறைவுற்ற பிறகு, ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் சார்பில்  மரைன் இன்சூரன்ஸ் என்று கூறக்கூடிய கடல் வழி மார்க்கத்திற்கான போக்குவரத்து காப்பீடு இருக்கும் நிறுவனங்களின் சரக்குகளுக்கு காப்பீடு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து சரக்குகளையும் அந்தந்த நிறுவனங்களின் கிடங்குகளுக்கு மாற்றி சேதமடைந்திருக்கும் அட்டைப்பெட்டிகளையும் அதில் உள்ள ஜவுளி பொருட்களையும் ஆராய்ந்து சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கும் சரக்குகளை பிரித்து நல்ல நிலையில் உள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ய தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

 


Karur: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்; கரூர் ஜவுளி நிறுவனங்களின் பொருட்கள் பாதிப்பு


 
சில ஜவுளி நிறுவனங்கள் தங்களுடைய சரக்குகளுக்கு காப்பீடு செய்யாமல் இருப்பதால்,  சேதம் அடைந்திருக்கும் சரக்குகளுக்கு கிடங்குகளின் மூலம் செய்யப்பட்டிருக்கும் காப்பீட்டின் மூலம் ஈட்டுத்தொகை பெற, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலம் கிடங்குகளின் நிர்வாகத்திற்கும், கிடங்கு நிர்வாகிகளின் சங்கத்திற்கும், கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜவுளி நிறுவனங்களின் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு கிடைத்த பிறகு சங்கத்தின் நிர்வாகிகள் தூத்துக்குடியில் உள்ள கிடங்குகள் அதனுடைய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளின்  சங்க நிர்வாகிகள் ஆகியோரை நேரில் சந்தித்து சேதமடைந்த பொருட்களுக்கான காப்பீட்டு தொகையை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
Actor Srikanth: போதைப் பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமில்ல.. லிஸ்ட் இன்னும் பெருசு! சிக்குவார்களா தமிழ் பிரபலங்கள்?
Actor Srikanth: போதைப் பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமில்ல.. லிஸ்ட் இன்னும் பெருசு! சிக்குவார்களா தமிழ் பிரபலங்கள்?
Govt School Admission: 3.35 லட்சத்தைக் கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை; இன்னும் அதிகரிக்குமா?
Govt School Admission: 3.35 லட்சத்தைக் கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை; இன்னும் அதிகரிக்குமா?
Embed widget