மேலும் அறிய

ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!

இடைநிலை ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்திட நிலுவையில்‌ உள்ள நீதிமன்ற வழக்குகளை துரிதமாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி அறிவுறுத்தி உள்ளார்‌.

ஜூலை மாத ‌இறுதிக்குள்‌ 2346 இடைநிலை ஆசிரியர்கள்‌ பணி நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அவர் தலைமையில்‌ சென்னை, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழக கூட்ட அரங்கில்‌ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்‌ இன்று நடைபெற்றது. பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ நடப்புக்‌ கல்வியாண்டில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்‌ குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில்‌ பணி

பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ பணிபுரிந்து பணியிலிருக்கும்‌ போதே காலங்சென்ற ஆசிரியர்கள்‌ மற்றும் பணியாளர்களின்‌ வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்‌ பணி வழங்கக்‌ கோரி பெறப்படும்‌ கோப்புகளை உடனுக்குடன்‌ ஆய்வு செய்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும்‌ பணி நியமனம்‌ கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்‌.

போக்சோ விசாரணை

போக்சோ வழக்கில்‌ குற்றம்‌ சாட்டப்பட்டுள்ளவர்கள்‌ மீது விசாரணையினை துரிதமாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையினை உடன்‌ சார்ந்த இயக்ககத்திற்கு அனுப்பி தொடர்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, நிலுவையிலுள்ள நீதிமன்ற கோப்புகளின்‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி வழக்கினை உடன்‌ முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

20.06.2025 நாள்‌ வரை 3,35,428 புதிய மாணவர்‌ சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்‌. 14417 கட்டணமில்லா சேவை மையத்தில்‌ பெறப்படும்‌ புகார்கள்‌ மீது மேற்கொள்ளப்படும்‌ நடவடிக்கைகள்‌ சூறித்து கேட்டறிந்தார்‌. மேலும்‌, சமூக நலத்துறை அலுவலர்களுடன்‌ ஒருங்கிணைந்து குழந்தைத்‌ திருமணம் நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.

ஜூலை இறுதிக்குள் ஆசிரியர் பணி நியமனம்

தொடக்கக்கல்வி இயக்ககத்தில்‌ வருகிற ஜூலை மாதம்‌இறுதிக்குள்‌ 2346 இடைநிலை ஆசிரியர்கள்‌ பணி நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்திட நிலுவையில்‌ உள்ள நீதிமன்ற வழக்குகளை துரிதமாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

அனைத்து மாவட்டங்களிலும்‌ பணியாற்றும்‌ 157 மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு கையடக்கக்‌ கணினிகளையையும்‌, 2024-25ஆம்‌ கல்வியாண்டில்‌ இல்லம்‌ தேடி கல்வித்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல்‌ மாவட்டம்‌ சேலம்‌ இரண்டாவது மாவட்டங்கள்‌ தேனி, திருநெல்வேலி மூன்றாவது மாவட்டம்‌ திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு கேடயங்களையும்‌, தமிழ்நாட்டின்‌ பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சிந்தனையினை வளர்ப்பதற்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்‌ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 38 முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு கேடயம்‌ நினைவுப் பரிசாக வழங்கியும்‌ பாராட்டு தெரிவித்தார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget