மேலும் அறிய

காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ப்ரியா அதிரடி

கடந்த 2023ஆம் ஆண்டே காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் மட்டும் 356 பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு சமைப்பதற்கான திட்டத்தினை அரசு தனியாரிடம் கொடுக்கலாம் என முயற்சி செய்தது. இதற்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக சாடின. மேலும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தன.

கடந்த 2023ஆம் ஆண்டே காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதற்காக தீர்மானமும் கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அத்தகைய முயற்சி கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது.


காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ப்ரியா அதிரடி

இதைத்தொடர்ந்து மீண்டும் அரசு அந்த முடிவை எடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மேயர் ப்ரியா கூறியிருந்தார். முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் எனவும் ப்ரியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இதன் மூலம்  1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து, கடந்த  25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாள் அன்று முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’  பரபரப்பு Press Meet!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!
Top 10 News Headlines: “2026-ல் அதிமுக வெற்றி பெறும்“, தமிழ்நாட்டில் 6 நாட்கள் வெளுக்கப் போகும் மழை - 11 மணி செய்திகள்
“2026-ல் அதிமுக வெற்றி பெறும்“, தமிழ்நாட்டில் 6 நாட்கள் வெளுக்கப் போகும் மழை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’  பரபரப்பு Press Meet!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!
Top 10 News Headlines: “2026-ல் அதிமுக வெற்றி பெறும்“, தமிழ்நாட்டில் 6 நாட்கள் வெளுக்கப் போகும் மழை - 11 மணி செய்திகள்
“2026-ல் அதிமுக வெற்றி பெறும்“, தமிழ்நாட்டில் 6 நாட்கள் வெளுக்கப் போகும் மழை - 11 மணி செய்திகள்
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
‘காங்கிரஸ் கட்சியில் சாதிய வன்மம்?’ செல்வப்பெருந்தகை படத்தை போடாமல் நிகழ்ச்சி..!
‘காங்கிரஸ் கட்சியில் சாதிய வன்மம்?’ செல்வப்பெருந்தகை படத்தை போடாமல் நிகழ்ச்சி..!
Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
Tamilnadu Roundup: மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
Embed widget