மேலும் அறிய

வேலைவாய்ப்பை உறுதி செய்யும், ஓராண்டு, ஈராண்டு படிப்புகள் - உடனே விண்ணப்பிங்க சொன்ன மாவட்ட ஆட்சியர்...

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் கல்வியாண்டில் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவு படிப்புகளில் சேர உடனே விண்ணப்பிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் கல்வியாண்டில் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் அதன் பணியினை துவங்கியுள்ளது. இந்த நிலையம், 2025-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தற்போது தொடங்கி, வேலைவாய்ப்புக்கு உகந்த பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

சேர்க்கை விபரம் 

இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில், பல்வேறு தொழிற்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அவை பின்வருமாறு

  • ஈராண்டு தொழிற்பிரிவுகள் (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)

ஆப்பரேட்டர் அட்வான்ஸ்டு மிஷின் டூல் (Operator Advanced Machine Tool)

 

  • இதில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குவது குறித்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். உற்பத்தி மற்றும் இயந்திரவியல் துறைகளில் வேலைவாய்ப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

  • மெக்கானிக் அக்ரிகல்சுரல் மெஷினரி (Mechanic Agricultural Machinery): விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களை பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் குறித்த நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம். இது விவசாயத் துறை மற்றும் அதை சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

எலக்ட்ரீஷியன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் (Electrician Power Distribution)

  • மின்சார விநியோகம், நிறுவல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். மின் துறையில் வேலைவாய்ப்பு பெற இது ஒரு சிறந்த வாய்ப்பு.

 

ஓராண்டு தொழிற்பிரிவு (எட்டாம் வகுப்பு தேர்ச்சி)

  • வெல்டர் (Welder)
  • உலோகங்களை இணைத்தல் மற்றும் பற்றவைத்தல் குறித்த அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். உற்பத்தி, கட்டுமானம், மற்றும் கனரக இயந்திரங்கள் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற இது உதவும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தொழில் பயிற்சி பெற விரும்பும் மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்

  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (ஈராண்டு பிரிவுகளுக்கு)

 

  • எட்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (ஓராண்டு பிரிவுக்கு)

 

  •  பள்ளி அசல் மாற்றுச் சான்றிதழ் (TC)

 

  •  சாதிச் சான்றிதழ்

 

  • ஆதார் அட்டை

 

  •  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் (4)

 

இந்த ஆவணங்களுடன், விண்ணப்பதாரர்கள் முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அருணா காம்ப்ளக்ஸ், செம்பனார்கோவில் மெயின் ரோடு, பரசலூர் - 609 309 என்ற முகவரியில் உள்ள நிலையத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, பயிற்சிக்குத் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு...

இந்த பயிற்சிகள் குறித்த மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், ஆர்வமுள்ளவர்கள் 9940857357 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கூறுகையில், "இந்த புதிய தொழிற் பயிற்சி நிலையம், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு. வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சிகள், மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கும். எனவே, இந்த அரிய வாய்ப்பை அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் ஒரு பயனுள்ள தனிமனிதனாக உயர உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த அரசின் முயற்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு புதிய திசையை காட்டி, அவர்களை தொழில் ரீதியாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Embed widget