மேலும் அறிய

கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமான தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி அதன் தொடர்ச்சியாக மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு வாரந்தோறும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனே தீர்வு கண்டு வரும் நிலையில்

 


கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பணியாற்றிய ஆட்சி காலத்தில் கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் இருக்கைகள் அமைத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு என பயன்படுத்தி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கிய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்த மாற்றுத் திறனாளியானபாபு.  இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். 

 


கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

மாற்றுத் திறனாளியான இவர் வேலைக்கு எதற்கும் செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மனைவி வேலைக்கு சென்று வரும் வருமானத்தில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிப்பறைக்கு சென்ற அவர் வழுக்கி விழுந்ததில் இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தனக்கு என்று தனி வீடு வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்த அவர், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார். விடியல் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை எனக் கூறி அனுப்பி வைத்து விட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில், ஆட்சியரின் காரின் முன்பு தனது மாற்றுத் திறனாளி வாகனத்தில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

 


கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

 

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரச பேச்சு நடத்தி ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். அப்போது, ஆட்சியர் ஒரு திட்டம் முடிவடைந்தால் அடுத்த திட்டம் வரும், வரும் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வீல் சேரில் அழைத்து வரப்பட்ட அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் வீடு திரும்பினார்.

 

 


கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாபு, மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை, வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாக பதில் மனு கொடுக்கிறார்கள், பிறகு அந்த திட்டம் தற்போது இல்லை என்கின்றனர். இது தொடர்பாக ஆட்சியரிடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கிறார். மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget