Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Chennai Local Train Cancelled(09.03.2025): சென்னை கடற்கரை-தாம்பரம் கடற்கரை இடையே வருகிற ஞாயிற்றுக்கிழமை புறநகர் மின்சார ரயில்களின் சேவை ரத்துச்செய்யப்படுகிறது.

மின்சார ரயில் சேவை:
சென்னையின் புறநகரங்களில் இருந்து சென்னை நகரத்தில் வருவதற்கும் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையில் மின்சார ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையும் மின்சார ரயில் சேவைகள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
ரயில் சேவை ரத்து:
இந்த நிலையில் மார்ச் 09, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புறநகர் ரயில் சேவைகளின் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நடவடிக்கைகளில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையேயான 04வது ரயில் பாதையை இயக்குவது தொடர்பாக, சென்னை எழும்பூர் விழுப்புரம் பிரிவில் சென்னை கடற்கரை மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பாதைத் தடுப்பு/சிக்னல் தடுப்பு மார்ச் 09, 2025 அன்று காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை (11 மணி நேரம்) அனுமதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, EMU ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் உள்ளன.
Line Block/Signal Block is permitted in Chennai Egmore – Villupuram section between #Chennai Beach & #Kodambakkam Railway stations in connection with commissioning of 04th railway line between Chennai Beach & Chennai Egmore on 09th March 2025.
— DRM Chennai (@DrmChennai) March 7, 2025
Passengers, kindly take note. pic.twitter.com/tgXqd8pyo4
சென்னை கடற்கரை தாம்பரம் சென்னை கடற்கரையில் இருந்து EMU ரயில்கள் காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரத்துக்கு பதிலாக, தாம்பரம் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பகுதியளவு ரத்தாகும் ரயில்கள்:
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/திருமால்பூர்/அரக்கோணம் இடையேயான EMU ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே 05:10 மணி முதல் 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் சிறப்பு ரயில்களின் விரிவான நேரங்கள் தெற்கு ரயில்வேயின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமான EMU ரயில் சேவைகள் அதே நாளில் 4:10 மணி முதல் மீண்டும் தொடங்கும்.
பயணிகள் புதுப்பிக்கப்பட்ட நேரங்களின்படி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், உங்கள் ஒத்துழைப்பைப் பாராட்டுகிறோம்.
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

