மேலும் அறிய

திருவான்மியூர் டு உத்தண்டி இனி 10 நிமிஷம் தான்.. ECR-யை மாற்ற போகும் 16Km உயர்மட்ட பாலம்..

ECR Thiruvanmiyur to Uthandi Elevated Corridor :" சென்னை இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கிலோமீட்டர் தூரத்திற்கு, உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைய உள்ளது"

Tidel Park junction To Uthandi Elevated Corridor: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர, 16 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ‌- Chennai ECR Road 

சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில், குடியிருப்புகளும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலைகளின் ஒன்றாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை (Chennai ECR Road) உள்ளது. தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. 

குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 4 வழிச்சாலையாக உள்ள நிலையில், தற்போது 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, 6 வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. 

கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச்சாலை திட்டம் (Thiruvanmiyur to Akkarai 6 Lane Road )

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வருங்காலங்களில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக உயர்வதற்கான வாய்ப்புகள், இருப்பதாகவும் சாத்திய கூறுகள் தெரிவிக்கின்றன.

6 வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிக அளவு குறையாது, என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. 

திருவான்மியூர் டு உத்தண்டி மேம்பால சாலை - ECR Elevated Corridor

இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மையப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. டைட்டில் பார்க் முதல் எஸ்.பி சாலை வரை, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்து உத்தண்டி சுங்கச்சாவடி வரை 16 கிலோமீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. 

இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியும் அதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் மேம்பாலச்சாலை அமைக்கப்பட்டால் மிகப்பெரிய போக்குவரத்து புரட்சி ஏற்படும். இது கிழக்கு கடற்கரைச் சாலையில் வெகுதூரம் செல்பவர்களுக்கு வர பிரசாதமாக அமைய உள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன? Key Features Of Thiruvanmiyur to Uthandi Elevated Corridor

தற்போது இந்த சாலையில், 17 இடங்களில் சிக்னல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைந்தால் 10 நிமிடத்தில் செல்ல முடியும். அதேபோன்று இந்த மேம்பால சாலையில் 5 இடங்களில், வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியே ஏறவும், பிரத்தேக வழிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து மாற்றத்தை, இந்த உயர்மட்ட மேம்பாலம் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நெடுஞ்சாலைத்துறை சமர்ப்பித்து, ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget