மேலும் அறிய

விரதம் இருந்து திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும் சிவகங்கை தொழிலாளர்கள்.. என்ன சொல்கிறார்கள்?

”காலம் காலமாக பெண்ணின் கழுத்தில் கிடக்கும் திருமாங்கல்ய கயிற்றை மனதில் எந்த வித கெட்ட எண்ணங்களும் இன்றி தயாரிக்கிறோம்” - தொழிலாளர்கள்.

புனிதமாக கருதப்படும் திருமாங்கல்ய கயிறை தொழிலாளிகள் விரதமிருந்து தயாரிப்பதாக நெகிழ்ச்சி பட தெரிவிக்கின்றனர். 

சிறப்புமிக்க திருமாங்கல்யம்

இந்துகளின் கலாச்சாரத்தில் திருமாங்கல்ய கயிறு மாற்ற நாள், கிழமை, நேரம் பார்த்து  தான் மாற்ற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. தாலிக் கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று பல்வேறு விடயங்கள் கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மிக முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும். தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்" என பல விசயங்களை நம்புகின்றனர். இப்படியான புனிதமாக கருதப்படும் திருமாங்கல்ய கயிறை தொழிலாளிகள் விரதமிருந்து தயாரிப்பதாக நெகிழ்ச்சி பட தெரிவிக்கின்றனர். 

கயிறு தயாரிப்பு தொழில் பிரதானம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கசயனாபுரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் முகூர்த்த மாதங்களை ஒட்டி கூலித் தொழிலாளர்கள் திருமாங்கல்ய கயிறு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கீழடி பகுதியில் உள்ள சயனாபுரம், பனையூர், சொட்டதட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மாங்கல்ய கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து கயிறுகள் தயாரித்து அனுப்படுகிறது. சீசனுக்கு ஏற்றவாறு கயிறு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆடு, மாடு, ஜல்லிகட்டு காளைகளுக்கான தேவையான கயிறு தயாரிப்பார்கள்.

பயபக்தியுடன் தயாராகும் மாங்கல்ய கயிறு

அதைப் போல் திருமண முகூர்த்த நாட்கள் வருவதால் திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். நூல்கள் மொத்தமாக வாங்கி கூலி தொழிலாளர்களிடம் வழங்கி விடுகின்றனர். அதனை கயிறாக திரித்து விற்பனை செய்கின்றனர். சயனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கருவேல மரங்களின் இடையே மெகா சைஸ் சக்கரம் பொருத்தில் அதனை கைகளால் சுழற்றி, சுழற்றி கயிறு தயாரிக்கின்றனர்.

தயாரிக்கும் கயிறுகளின் எடைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. மற்ற கயிறுகளை விட திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும்போது மட்டும் தொழிலாளர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் தயாரிக்கின்றனர்.

மன நிறைவை தரும் கயிறு தொழில்

தயாரிப்பாளர்கள் கூறும் போது,” திருமாங்கல்யத்தை சிலர் மஞ்சள் கயிரில் அணிகின்றனர். சிலர் தங்கத்தில் அணிகின்றனர். அந்த தாலி கயிற்றை வருடத்திற்கு 2 முறை மாற்றுவது வழக்கம். முக்கியமாக ஆடிப் பெருக்கு நாளில் மாற்றுவார்கள். மேலும் மற்ற நேரங்களில் பெரியவர்கள் ஆலோசனைப் படி மாங்கல்யம் மாற்றுவார்கள். திருமாங்கல்ய கயிறு என்பது ஒரு பெண்ணின் மனதை நிறைவு பெற செய்வது. காலம்காலமாக பெண்ணின் கழுத்தில் கிடக்கும் திருமாங்கல்ய கயிற்றை மனதில் எந்த வித கெட்ட எண்ணங்களும் இன்றி தயாரிக்கிறோம்.

மற்ற கயிறுகள் தயாரிப்பதை காட்டிலும் திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும் போது மன நிறைவு கிடைக்கும். தமிழகத்தில் சித்திரைத் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மழை காலங்களை தவிர மற்ற காலங்களில் கயிறு தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்றனர். திருமாங்கல்ய கயிறு, ஜல்லிக்கட்டு காளை கயிறு தவிர விசைப்படகுகளை கட்ட பயன்படும் ராட்சத கயிறு, மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் கயிறு, தொட்டில் கயிறு என பல்வேறு கயிறுகள் வெள்ளை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்” என தெரிவித்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget