மேலும் அறிய

மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்

அதிக குடியினால் சீரழிந்த குடும்பம் கணவர், மாமனாரின் வரதட்சணை தொல்லை – மாமனாரின் இழிவான செயலில் விரக்தியடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை.

 

ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
 
ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியை சேர்ந்த விவசாயியான முனீஸ்வரன் (38) என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா ( 32) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் முனீஸ்வரன் - மாமனார்  அண்ணாத்துரை ( 60) ஆகியோர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், பாலியல் ரீதியாக மாமனார் அண்ணாத்துரை துன்புறுத்தியதாகவும் கூறி நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 70 சதவிகித தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா உயிரிழந்தார். 
 
வழக்குப் பதிவு
 
கணவர் முனீஸ்வரன் மற்றும் மாமனார் அண்ணாதுரை ஆகியோர் வரதட்சனை கேட்டும், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும் உயிரிழந்த பெண் ரஞ்சிதா வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பெருநாழி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் பாலியல் துன்புறுத்தல் வழக்காக இதை ஏற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரஞ்சிதாவின் குடும்பத்தையே சீரழித்துவிட்ட நிலையில், அவரது 10 வயது மகன் மருத்துவமனையில் கண்ணீர் மல்க நின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதாவின் உடல் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், தாயின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தினமும் குடித்துவிட்டு தொல்லை
 
இறந்த பெண்ணின் ஏழு வயது மகன் கூறும்போது..,” அப்பா தினமும் குடிச்சிட்டு சண்டை போடுவார். அப்பா எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு தான் இருப்பாரு. தாத்தா அம்மாகிட்ட தவறா நடந்தது பற்றி அம்மா அப்பா கிட்ட சொன்ன போதெல்லாம் சகஜம் அப்படினு அப்பா சொன்னாரு. இதனால அம்மா இறந்து போயிட்டாங்க" எனக்கூறினார்.
 
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
 
இறந்த பெண்ணின் சகோதரி  கூறுகையில்..,” எங்க அக்கா வாக்கப்பட்ட நாளிலிருந்து எப்போதும் அழுது கொண்டே தான் இருப்பாள். நிம்மதியாக ஒரு நாள் கூட இருந்தது இல்லை. அவளது கணவர் குடிச்சிட்டு எப்போதும் அவளை துன்புறுத்திக் கொண்டே இருப்பார். அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று.
அவளது மாமனார் சொல்வார். அவளை மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா பெண்களிடமும் தவறாக தான் நடந்து கொள்ள முயற்சி செய்வார். இவளை நெடுநாளாக துன்புறுத்தி வந்துள்ளார். இதையெல்லாம் அவள் எங்களிடம் சொல்லவே இல்லை. சில நாட்களுக்கு முன்பாக தான் சொன்னாள். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய வேண்டும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
PAK Vs Talibans: ”டோரா போரா குகைக்கே ஓடவிடுவோம்” தாலிபன்களை மிரட்டும் பாகிஸ்தான் - துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி
PAK Vs Talibans: ”டோரா போரா குகைக்கே ஓடவிடுவோம்” தாலிபன்களை மிரட்டும் பாகிஸ்தான் - துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Bussy Anand|போர்க்கொடி தூக்கிய Virtual Warriorsபுஸ்ஸி ஆனந்துக்கு செக்அதிரடி காட்டும் விஜய்
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
PAK Vs Talibans: ”டோரா போரா குகைக்கே ஓடவிடுவோம்” தாலிபன்களை மிரட்டும் பாகிஸ்தான் - துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி
PAK Vs Talibans: ”டோரா போரா குகைக்கே ஓடவிடுவோம்” தாலிபன்களை மிரட்டும் பாகிஸ்தான் - துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Vetrimaaran: பொல்லாதவன் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? வெற்றிமாறன் பகிர்ந்த ரகசியம்
Vetrimaaran: பொல்லாதவன் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? வெற்றிமாறன் பகிர்ந்த ரகசியம்
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
Embed widget