மேலும் அறிய

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி

வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் இறந்துள்ளார். எனவே, ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது- மதுரை கிளை

நெல்லை மாவட்டம், காற்குடியைச் சேர்ந்த பதிபூரணம். கடந்த 1994ல் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் செங்கோட்டை காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த நெல்லை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 1996ல் பதிபூரணத்திற்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பதிபூரணம் இலவச சட்டப் பணிகள் ஆணையத்தின் மூலம் 2018ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாமதமாக மேல்முறையீட்டு மனு செய்தார். அதில், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, ‘‘வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
 

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி
 
சம்பவத்தின்போது உடனிருந்தவர்கள் நேரில் பார்த்த சாட்சியத்தை பதிவு செய்துள்ளனர். இறந்தவரின் உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்துள்ளன. இதனால் தான் செங்கோட்டை மருத்துவமனையில் இருந்து தென்காசி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு மாற்றியுள்ளனர். சாட்சிகள் மற்றும் ஆவண, ஆதாரங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் இறந்துள்ளார். எனவே, ஆயுள் தண்டனை விதித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.
 

 
ஆதிதிராவிடர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட கோரிய வழக்கு - 31ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவு
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கண்மாய் பட்டியைச் சேர்ந்த அழகு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது சுமார் 25 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம் தற்போது இந்த வீடுகள் இடிந்து மோசமான நிலையில் உள்ளன எனவே இந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தருமாறு உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அரசுத் தரப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு ஒப்புதலுக்காக உள்ளது ஒப்புதல் கிடைத்ததும் ஆறு மாதத்தில் வீடுகள் கட்டும் பணி முடிக்கப்படும் அதுவரை சமுதாயக் கூடத்தில் தங்கியிருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள் வீடுகள் மோசமாக உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கும் கலெக்டர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் டிசம்பர் 31-க்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் அது வரையில் தற்காலிக மற்றும் இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தாங்கள் நேரில் வந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
Embed widget