மேலும் அறிய

ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரூபாய் 7.5 லட்சம் பரிசு-மத்திய ரயில்வே அமைச்சர் வழங்கினார்.

’’ஒலிம்பிக் போட்டியில் ரயில்வே துறை சார்பில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா புதுடில்லியில் நடைபெற்றது’’

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கணை ரேவதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டார். அவரை பாராட்டும் விதமாக அவருக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த ரேவதி தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். பல்வேறு குடும்ப நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வியை தொடங்கிய ரேவதி தனது 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தார். மாநில அளவில் நடந்த தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த நிலையில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதிக்கு பொருளாதார உதவியையும் பயிற்சியையும் அளித்து வந்தார். 

ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரூபாய் 7.5 லட்சம் பரிசு-மத்திய ரயில்வே அமைச்சர் வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட ரேவதிக்கு லேடி டாக் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அங்கே சென்று தனது அடுத்தகட்ட தடகள பயிற்சியை தொடர்ந்த ரேவதி மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தேசிய முகாமில் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அங்கு சென்றவுடன் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து 400 மீட்டர் ஓட்டத்திற்கு தனது இலக்கை மாற்றிக்கொண்டார் ரேவதி. சமீபத்தில்  டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். அவரால் பரிசு பெறமுடியவில்லை என்றாலும் தொடர்ந்து அடுத்த முறை பங்கேற்று வெற்றி பெருவேன் என தெரிவித்துள்ளார்.


ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரூபாய் 7.5 லட்சம் பரிசு-மத்திய ரயில்வே அமைச்சர் வழங்கினார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற ரயில்வேத்துறை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா  புதுடில்லியில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற ரயில்வே விளையாட்டு வீரர்கள், ரயில்வே பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்தார்.


ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரூபாய் 7.5 லட்சம் பரிசு-மத்திய ரயில்வே அமைச்சர் வழங்கினார்.

மேலும் வெள்ளி பதக்கம் வென்ற இரண்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 2 கோடியும், வெண்கலம் வென்ற மூன்று பேருக்கு தலா ஒரு கோடியும், போட்டிகளில் நான்காவது இடத்திற்கு வந்த 12 பேருக்கு தலா ரூபாய் 35 லட்சமும், ஆறாவது இடத்திற்கு வந்த ஒரு வீரருக்கு ரூபாய் 35 லட்சமும், போட்டிகளில் பங்கு பெற்ற மதுரை ரயில்வே ஊழியர் வீரமணி ரேவதி உட்பட ஏழு பேருக்கு தலா ரூபாய் 7.5 லட்சமும் பரிசும் வழங்கி பாராட்டினார். பதக்கங்கள் பெற உறுதுணையாக இருந்த பளுதூக்கும் பிரிவு, குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் ஆறு பேருக்கும் ரூபாய் 82.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். விழாவில் ரயில்வே வாரிய முதன்மை செயல் அதிகாரி சுமித் சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIESPonmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.Kதூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
Bus Driver Sudden Death: ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
Embed widget