மேலும் அறிய

வயது வரம்பை காரணம் காட்டி வேலை மறுக்கக் கூடாது: ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பேரவையில் தீர்மானம்

பேரவை கொடியை ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். பேரவையை சுமை சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தஞ்சாவூர்: நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வயது வரம்பை காரணம் காட்டி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுக்கக்கூடாது என ஏ‌ஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க 39 வது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 39-வது ஆண்டுப் பேரவை தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட செயலாளர் சி.சௌந்தர்ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

பேரவை கொடியை ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். பேரவையை சுமை சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு தொடக்கி வைத்து உரையாற்றினார். நடைபெற்ற பணிகள் குறித்து வேலை அறிக்கையையும், எதிர்கால கடமைகள் குறித்தும் மாநில பொதுச் செயலாளர்        சி. சந்திரகுமார் முன் வைத்து உரையாற்றினார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் தி. கோவிந்தராஜன் முன்வைத்தார். நிர்வாகி டி.கே. சூரிய மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அஞ்சலி தீர்மானத்தை பி.அன்பழகன் முன்மொழிந்தார். இறந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 10 பேர் குடும்பங்களுக்கு ரூ 10,000 வீதம் ரூ1,00,000 குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர்  கோ.சக்திவேல், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன். அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பி‌. முத்துக்குமரன், உடல் உழைப்பு தொழிலாளர் சங்க பி.சுதா, தையல் தொழிலாளர் சங்க கே.கல்யாணி ஆகியோர் பேரவையை வாழ்த்தி உரையாற்றினர்.

பேரவையில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு நுகர்பொருளா வாணிபக் கழக நிர்வாகம் மிக அலட்சிய போக்குடன் செயல்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள்  விற்பனைக்கு கொண்டு வருவதை உடனடியாக கொள்முதல் செய்யப்படாமல், கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்படாமல்,தேங்கி வீணாகின்ற சூழலும் உள்ளது. எனவே விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை முழுமையாக தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும், உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளாக கூலி  உயர்வு வழங்கப்படவில்லை, எனவே ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்க வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களின் வயதுவரம்பினை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கக்கூடாது. பணியின் போது மரணம் அடையும்     சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று இறப்பு நலநிதி வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தனியார்மய நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget