மேலும் அறிய

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்விக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,62,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 506 நபர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை  முந்தைய நாளை விட சற்று கூடுதலாக உள்ளது. 

நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட திட்டத்தை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட் திட்டத்தை  செயல்படுத்தப்படுகிறது. 

புதுச்சேரி: 264 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் 38.23 சதவித பயனாளிகளுக்கு முதற்கட்ட தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
Caption

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே திரிபாதி பணிஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடத்திய தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி எழுத்து தேர்வு(I) முடிவுகளை வெளியிட்டது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில்  joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். 

பாதுகாப்பு படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்படி, நாகாலாந்து பதற்றமான பகுதி என்ற அறிவிப்பை, மத்திய அரசு மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.

Nagaland| நாகாலாந்து அமைதி குலைந்த மாநிலம்- மத்திய அரசு அறிவிப்பு   


Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களிடம்  பிரதமர் நரேந்திர மோடி, 2021 ஜூலை 1ம் தேதி மாலை  3 மணிக்கு உரையாற்றுகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் மனுத்தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில்,"பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கத் தேசிய பேரிடர் நிதியைப் பயன்படுத்தினால், அந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாகிவிடும்" என தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget