Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசி கிண்டல் செய்த வீடியோ வெளியாக சர்ச்சையான நிலையில், இது தொடர்பக ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
தவெக சார்பில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனார். அப்போது ஆனந்துடன் நடந்த வரும் ஆதவ் அர்ஜூனா தமிழக பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி கிண்டல் செய்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதங்களில் வெளியாகி சர்ச்சையானது.அதோடு அதிமுக - மற்றும் பஜகவினர் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு”என்று கூறியுள்ளார்.





















