மேலும் அறிய

கூடுதல் வருமானம் பெற தேக்கு பயிரிடலாமே... விவசாயிகளுக்கு யோசனை

தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: மரம் வளர்ப்பதன் மூலம் மனிதன் வெளிவிடும் கரியமில வாயுவினை உட்கொண்டு மனித குலம் வாழ தேவையான பிராண வாயுவினை வெளியிடுகிறது. இதன் மூலம் காற்றை சுத்தப்படுத்தும் கருவியாக மரம் செயல்படுகிறது. விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவியாகும், மரங்கள் செயல்பட்டு மழை பெய்ய வைக்கும் மந்திரவாதியாகவும் உள்ளது என்றால் மிகை இல்லை.

கூடுதலாக மண்வளம் காக்கவும், காற்றில் ஈரப்பதத்தை காக்கவும், ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை நிலை நிறுத்தவும் மரங்கள் பயன்படுகிறது. மரம் வளர்ப்பவர்களுக்கு கரம் வளர்க்கும் கடின மரம் தேக்கு என்றால் மிகையாகாது.

தேக்கு மரத்தின் விஞ்ஞான பெயர் டெக்டோனியா கிராண்டிஸ். இது வெர்பனேசியே குடும்பத்தை சேர்ந்தது. தரைமட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. வருடத்திற்கு ஆயிரம் முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய இடங்களில் வேகமாக வளரும். ஆழமான மண் வகை கொண்ட செழிப்பான மண்படுகைகளில் மளமளவென வளரும். காவிரி டெல்டா பகுதியான நீடாமங்கலம் அருகில் மூணாறு தலைப்பில் முதன்முதலாக நடப்பட்ட தேக்கு மரம் இன்றும் காட்சியளித்துக் கொண்டு உள்ளதை பார்க்கலாம்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூப்பூத்து மே முதல் ஜூலை வரை விதைகளை தரக்கூடியது. மேட்டுப்பாத்தியில் விதைத்து ஒருநாள் ஈரமாகவும், மறுநாள் காய்ந்தும் 14 நாட்கள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் மூன்றாவது வாரத்தில் முளைக்கத் துவங்கும். 12 மாத கன்றினை எடுத்து நடவு செய்யலாம்.

தண்டுப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளம் வைத்து வெட்டி விட வேண்டும். கிழங்கு மற்றும் வேர்ப்பகுதி 22.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம் குழி எடுத்து இரண்டு மீட்டருக்கு இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு இரண்டு கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் டிஏபி கலந்து இட வேண்டும். நடவு செய்ய செப்டம்பர், அக்டோபர் மாதம் சிறந்தது.

தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். 4,8,12, 18, 26, 36 ஆண்டுகளில் இடைவெளியை களைய வேண்டும். சாதாரணமாக ஒரு ஆண்டில் வேகமாக வளரும். நல்ல பாசனம் உள்ள இடங்களில் 20 ஆண்டுகள் வரையிலும், வயல் வரப்புகளில் 15 ஆண்டுகள் வரை வளர்க்கலாம்.

தேக்கு மரம் மிகவும் அழுத்தமான மர வகையை சேர்ந்தது. இதன் அடர்த்தி 60  கிலோ- மீ3. இதனால் தொழிற்சாலைகளிலும், வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அபரிமிதமான ஆதாயத்தை பெற விவசாயிகள் வயல்களில் தேக்கு மரத்தை நட்டு கூடுதல் வருமானம் பார்க்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ்  அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் அதிரடி
Embed widget