மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் முடக்கம்: என்ன காரணம்?

மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், ஒவ்வொரு அரிசி ஆலைகளுக்கும் வழங்கும். அதன்படி 50 கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவோம்.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் முடங்கி போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதனால் தெரியுங்களா?

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் அரிசி அரவை ஆலைகள் செயல்படாமல் முடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்து வேறு பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், பொதுமக்களிடையே ரத்தசோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில், ரூ.17 ஆயிரத்து 82 கோடி செலவில், உணவுச்சட்டத்தின் கீழ் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பரிந்துரைத்த தரத்தின்படி, வழக்கமான அரிசியுடன் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை சேர்க்கப்பட்டு, பொதுவினியோக திட் டம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பொதுவினியோகத் திட்டத்திற்கான அரிசி அரவை பணியை தமிழகத்தில் 900 அரிசி ஆலைகள் மூலமும், இதுதவிர அரசு அரிசி ஆலைகள் மூலமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் பெறப்படும் நெல், குடோனுக்கு கொண்டு சென்று, அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்து சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பதோடு, அரிசி அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட அரிசி அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரவை செய்யப்படும் அரிசி மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மற்றும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த அரிசி ஆலைகளில், அரைக்கப்பட்டு அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை சேர்க்க தேவையான செறிவூட்டப்பட்ட அரிசிகள் ஆலைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அரிசி ஆலைகளில் அரவை பணிகள் முடங்கியுள்ளன. இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டும் நெல் மூட்டைகள், நேரடி நெல்கொள்முதல் நிலையம், லாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில், பல நாட்களாக தேக்கமடைந்துள்ளது. 

பொது வினியோகத்திட்டத்திற்கான அரிசி வினியோக பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு, ரேஷனில் அரிசி தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம் உள்ளதாக தனியார் அரிசி ஆலை முகவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரிசி ஆலை முகவர்கள் தரப்பில் கூறியதாவது: 

மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், ஒவ்வொரு அரிசி ஆலைகளுக்கும் வழங்கும். அதன்படி 50 கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவோம். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 11 லட்சம் டன் பொது வினியோக திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒரு மாதம் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3.50 லட்சம் டன் அரிசி வினியோகிக்கப்படுகிறது. தற்போது மூன்று மாத தேவைக்கான அரிசி மட்டுமே இருப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதங்களாக செறிவூட்டப்பட்ட அரிசி, ஆலைகளுக்கு வழங்கப்படாததால், அரவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இல்லாத சூழலில் அரிசி ஆலையில் வேலை பார்த்தவர்களும் காத்திருந்து, காத்திருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேறு பணிக்கு சென்று விட்டனர். இதனால் உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சில அரவை ஆலைகளும் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmalkumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Embed widget