மேலும் அறிய

குழாய் மூலம் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர்: அனைத்து வீடுகளுக்கும் சென்றடைந்த மின்சாரம்; தரவுகளுடன் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும் உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் இந்தியா இணைந்துள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

"குழாய் மூலம் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர்"

அதில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "குழாய் மூலம் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு, 18,000 கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆனால், இன்று அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் சென்றடைந்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடியின் எண்ணப்படி, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அரசுக்கு உதவ யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் பங்களிக்க நாட்டின் இளைஞர்களை வலியுறுத்துகிறேன். இந்தியா ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்துள்ளது.

2047ஆம் ஆண்டுக்குள், சுதந்திரம் அடைந்து நூற்றாண்டுகள் முடிவில் வளர்ந்த நாடாக முன்னேறும். இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் இந்தியா இணைந்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி அறிக்கையின்படி, 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்.

"ஒரு நபரின் மதிப்பு அவர்களின் அறிவால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை"

ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உட்பட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. தேசத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும் இளைஞர்களுக்கு ஆற்றலும் திறனும் உள்ளது" என்றார்.

மாணவர்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "நாட்டின் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மற்றும் மரபுகளுடன் இணைந்து மாணவர்கள் கல்வி மற்றும் அறிவைப் பின்தொடர்கின்றனர். இந்த விழுமியங்கள் தனிநபரை வரையறுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்தியாவில், ஒரு நபரின் மதிப்பு அவர்களின் அறிவால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மதிப்பு, நடத்தை மற்றும் திறனை அவர்கள் திறம்பட பயன்படுத்த குணநலன் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். தனிமனித வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஈகோ, அதீத நம்பிக்கை மற்றும் சுயநல மனப்பான்மை ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கிறேன். 

கூட்டாகவும் அனைவரையும் உள்ளடக்கியும் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். கல்வி நிறுவனங்கள் அவர்களை கல்வி மற்றும் மனரீதியாக வளர்க்கும் அதே வேளையில், மாணவர்களின் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன்" என்றார்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
Loan Collection New Rules: வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Embed widget