மேலும் அறிய

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் மும்பையில் தொடுக்கப்பட்டுள்ளன

மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதில் பாகுபாடு காட்டுவதில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ”மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை சீராக முறையான கால இடைவெளியில் மைய அரசு வழங்கிவருகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஆம்பிடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.


கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

மேலும், “மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு உரியபடி கிடைக்கின்ற அளவு மருந்துகளை மத்திய அரசு ஒதுக்குவதில் யாரும் குறைகூற முடியாது. மருந்தைத் வழங்குவதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இதற்காக தனி பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது; அதை உச்ச நீதிமன்றம் கண்காணித்துவருகிறது. அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் இருந்து அண்மையில் தயாரிக்கப்பட்ட அதிகத் திறன்வாய்ந்த ஆம்போடெரிசின் பி மருந்தை இறக்குமதி செய்வதற்கு ஆறு மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அனில் சிங் தெரிவித்தார். 

முன்னதாக, கரும்பூஞ்சைத் தொற்றுக்கான மருந்துகளை மகாராஷ்டிர மாநிலத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமான முறையில் பகிர்ந்தளிக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி அனில் சிங் விவரித்தார். ”கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு அன்றாடம் 15 ஆயிரம் குப்பிகள் எனும் கணக்கில் இதுவரை 1,40,260 குப்பிகள் ஆம்போடெரிசின் பி மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 6 இலட்சத்து 70 ஆயிரம் குப்பிகளே அளிக்கப்பட்டுள்ளன” என்றும் அனில் சிங் கூறினார். 

மகாராஷ்டிர மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி, மாநிலத்துக்கு அன்றாடம் 17, 500 ஆம்போடெரிசின் பி மருந்து தேவைப்படுவதாகக் கூறினார். கடந்த 15ஆம் தேதிவரையிலான மகாராஷ்டிர மாநில கரும்பூஞ்சை பாதிப்பு பற்றிய ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 
அதன்படி, மகாராஷ்டிரத்தில் 7ஆயிரத்து 511 கரும்பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. அவர்களில் குறைந்தது 75 பேராவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இறந்துள்ளனர். கும்பகோனி கூறியதில் இன்னொரு முக்கிய தகவல், ஆம்போடெரிசின் பி மருந்தை மகாராஷ்டிர அரசாங்கமே ஹாஃப்கின் பயோ நிறுவனத்துடன் இணைந்து கூட்டாகத் தயாரித்துவருகிறது என்பது. ஜூன் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் 40 ஆயிரம் குப்பிகள் மருந்தை அதிலிருந்து பெறமுடியும்” என்றும் அவர் கூறினார். 

கடந்த 10ஆம் தேதியன்றே ஆரம்பகட்ட உற்பத்தி முடிந்துவிட்டது என்றும் கிருமிநீக்கப் பணியால் தாமதமாகிவிட்டதாகவும் கும்பகோனி தெரிவித்தார். 
மும்பை மாநகராட்சி சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அனில் சாக்ரே, மும்பை நகரில் மட்டும் 282 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றார். வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அன்றைய தினம் தங்களின் பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் அங்கு தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீதிமன்றம் மொத்தமாக விசாரித்து வருகிறது

Also Read : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Embed widget