மேலும் அறிய

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் மும்பையில் தொடுக்கப்பட்டுள்ளன

மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதில் பாகுபாடு காட்டுவதில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ”மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை சீராக முறையான கால இடைவெளியில் மைய அரசு வழங்கிவருகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஆம்பிடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.


கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

மேலும், “மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு உரியபடி கிடைக்கின்ற அளவு மருந்துகளை மத்திய அரசு ஒதுக்குவதில் யாரும் குறைகூற முடியாது. மருந்தைத் வழங்குவதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இதற்காக தனி பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது; அதை உச்ச நீதிமன்றம் கண்காணித்துவருகிறது. அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் இருந்து அண்மையில் தயாரிக்கப்பட்ட அதிகத் திறன்வாய்ந்த ஆம்போடெரிசின் பி மருந்தை இறக்குமதி செய்வதற்கு ஆறு மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அனில் சிங் தெரிவித்தார். 

முன்னதாக, கரும்பூஞ்சைத் தொற்றுக்கான மருந்துகளை மகாராஷ்டிர மாநிலத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமான முறையில் பகிர்ந்தளிக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி அனில் சிங் விவரித்தார். ”கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு அன்றாடம் 15 ஆயிரம் குப்பிகள் எனும் கணக்கில் இதுவரை 1,40,260 குப்பிகள் ஆம்போடெரிசின் பி மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 6 இலட்சத்து 70 ஆயிரம் குப்பிகளே அளிக்கப்பட்டுள்ளன” என்றும் அனில் சிங் கூறினார். 

மகாராஷ்டிர மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி, மாநிலத்துக்கு அன்றாடம் 17, 500 ஆம்போடெரிசின் பி மருந்து தேவைப்படுவதாகக் கூறினார். கடந்த 15ஆம் தேதிவரையிலான மகாராஷ்டிர மாநில கரும்பூஞ்சை பாதிப்பு பற்றிய ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 
அதன்படி, மகாராஷ்டிரத்தில் 7ஆயிரத்து 511 கரும்பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. அவர்களில் குறைந்தது 75 பேராவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இறந்துள்ளனர். கும்பகோனி கூறியதில் இன்னொரு முக்கிய தகவல், ஆம்போடெரிசின் பி மருந்தை மகாராஷ்டிர அரசாங்கமே ஹாஃப்கின் பயோ நிறுவனத்துடன் இணைந்து கூட்டாகத் தயாரித்துவருகிறது என்பது. ஜூன் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் 40 ஆயிரம் குப்பிகள் மருந்தை அதிலிருந்து பெறமுடியும்” என்றும் அவர் கூறினார். 

கடந்த 10ஆம் தேதியன்றே ஆரம்பகட்ட உற்பத்தி முடிந்துவிட்டது என்றும் கிருமிநீக்கப் பணியால் தாமதமாகிவிட்டதாகவும் கும்பகோனி தெரிவித்தார். 
மும்பை மாநகராட்சி சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அனில் சாக்ரே, மும்பை நகரில் மட்டும் 282 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றார். வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அன்றைய தினம் தங்களின் பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் அங்கு தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீதிமன்றம் மொத்தமாக விசாரித்து வருகிறது

Also Read : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Pa Ranjith CM Stalin: எகிறிய பா. ரஞ்சித்..! ” சாதி பிரச்னை, குறைந்தப்பட்சம் ஒப்புகொள்வீரா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி
Pa Ranjith CM Stalin: எகிறிய பா. ரஞ்சித்..! ” சாதி பிரச்னை, குறைந்தப்பட்சம் ஒப்புகொள்வீரா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Pa Ranjith CM Stalin: எகிறிய பா. ரஞ்சித்..! ” சாதி பிரச்னை, குறைந்தப்பட்சம் ஒப்புகொள்வீரா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி
Pa Ranjith CM Stalin: எகிறிய பா. ரஞ்சித்..! ” சாதி பிரச்னை, குறைந்தப்பட்சம் ஒப்புகொள்வீரா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி
TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?
TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?
என்னா கிழி...பிரதீப் ரங்கநாதனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய பெண்...வைரலாகும் வீடியோ
என்னா கிழி...பிரதீப் ரங்கநாதனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய பெண்...வைரலாகும் வீடியோ
CM Stalin: “டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், கூட்டணி சிக்கல்” - சிஎம் ஸ்டாலின் அதிரடி பதில்கள்
CM Stalin: “டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், கூட்டணி சிக்கல்” - சிஎம் ஸ்டாலின் அதிரடி பதில்கள்
Kamal Hassan: கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.