மேலும் அறிய

ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !

ஸ்டாலின் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றியிருக்கிறது. வாக்குறுதிகளைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? - ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி.

எங்களுக்கும் உங்கள் வரலாறு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்து பேசுங்கள் நேரு -ஆர்.பி.உதயகுமார்

இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை
 
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில்..,” மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியின்றி தனது அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை. "திமுக-விற்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்து, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்" என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையை தகர்த்து எரிந்து வருகிறது. அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி. "இனியும் பல கட்சிகள் கூட்டணியில் சேரப்போகின்றன" என்று மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் சொன்னதும், ஸ்டாலின் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றியிருக்கிறது. வாக்குறுதிகளைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்  ஸ்டாலின்? "ஆக... நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என ஒன்று இருக்காது". ஆட்சிக்கு வந்தீர்கள். நான்காண்டுகள் நன்றாக பெஞ்ச் தேய்த்தீர்கள். நீட் தேர்வு போனதா? நேற்று முன்தினம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 5-வது முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
 
நேருவின் பெயரில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கை
 
இதற்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார் நேரு? இந்த ஒரே கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், 4 ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருப்பது திமுக தானே? "எங்களுக்கு சீட் அதிகமாக கொடுக்க வேண்டும்" , "திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை", "கூட்டணிக் கட்சித் தலைவர்களை திமுக மதிப்பது இல்லை" என்றெல்லாம் சொல்வது யார்? திமுக கூட்டணியில் உள்ள விசிக, மா.கம்யூ. மற்றும் த.வா.க. 1980 சட்டமன்றத் தேர்தலில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பயந்து, 112 சீட்டுகளில் மட்டுமே நின்று, 122 சீட்டுகளை கூட்டணியிடம் கொடுத்து, மைனாரிட்டியாக பம்மிக் கொண்ட கட்சி தான் திமுக. போகின்ற நிலையைப் பார்த்தால், 2026-ல், மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு பயந்து, மீண்டும் மைனாரிட்டி எண்ணிக்கையிலான தொகுதிகளில் தான் நீங்களே நிற்பீர்கள் போல. பெட்டியைப் பற்றி நகராட்சித் துறை அமைச்சராக இருக்கும் நேருவின் பெயரில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம். 
 
அம்மாவிற்கு பிறகும் சிறப்பான ஆட்சி
 
கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் மாடல் அரசு, எத்தனைப் "பெட்டி"களை அள்ளிக் குவித்துள்ளது என்பதை நேரு சொல்லாவிடினும், 2026-ல் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்வார்கள்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள், கழகத்தின் கிளைச் செயலாளர் என்ற அடிப்படை நிலையில் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு கழகத்தின் பொதுச்செயலாளராக, மக்களின் முதல்வராக இருக்கிறார். தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலினின் கொத்தடிமையாக உள்ள நேருவுக்கும் உழைப்பைப் பற்றி என்ன தெரியும்? மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினார்களின் ஒருமித்த ஆதரவுடன் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறகு முதல்வராக அம்மாவின் அரசை திறம்பட வழிநடத்தி, மக்களுக்கான நல்லாட்சியை வழங்கினார்கள்.
 
குடும்பத்தின் கொத்தடிமைகள் அல்ல.
 
அதை நேருவோ, ஸ்டாலினோ மறுப்பார்கள் எனில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, நாவலர் முதல்வராக வேண்டிய சூழலில், கருணாநிதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலில் ஊர்ந்து சென்று, மண்டியிட்டு, துதி பாடி, புரட்சித் தலைவரின் கருணைப் பார்வை பட்டதனால் தானே முதல்வர் ஆனார்? எங்களுக்கும் உங்கள் வரலாறு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்து பேசுங்கள் நேரு! நாங்கள் சொன்னதில் எது பொய் என என்ன ஆதாரம் காட்டினார் பொம்மை முதலமைச்சர்? அவர் நடத்திய Operation Photoshoot பற்றி ஒரு செய்தி வந்ததாக பீத்திக் கொண்டாரே- அதுவா? இதையெல்லாம் மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் நேரு. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை செய்தித் கால்களையும், ஊடகங்களையும் பார்த்து தான் எங்கள் பொதுச்செயலாளர் அறிக்கை மற்றும் பதிவுகளை தெரிவிக்கிறார்கள். ஸ்டாலினைப் முரசொலியைப் படித்தும், கருணாநிதி செய்திகள் சேனலைப் பார்த்தும் "நல்லாட்சி" என்று மார்தட்ட நாங்கள் ஒன்றும் ஒரு குடும்பத்தின் கொத்தடிமைகள் அல்ல.
 
அந்த பயத்தை அப்படியே Maintain பண்ணுங்க
 
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை மிக வலுவாக இருக்கிறது. திமுக-விற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கிறது என்ற பீதி திமுகவுக்கு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, சமீபத்தில் ED-யின் விசாரணை வளையத்தில் நேருவின் மகனும் தம்பியுமே சிக்கிருக்க, இன்னும் எத்தனைத் "தம்பி"கள் சிக்குவார்களோ? எத்தனை திமுக-வினர் சிறையில் கம்பி எண்ணப் போகிறார்களோ? என்ற மரண பீதியில் திமுக உறைந்து போயுள்ளதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த பயத்தை அப்படியே Maintain பண்ணுங்க. 2026 களத்தில் சந்திப்போம்!” எனவும் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Embed widget