Tamil Nadu Coronavirus LIVE News : இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,805 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,25,215 ஆக சரிந்துள்ளது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி திட்டம்- முதல்வர் தொடங்கி வைத்தார்.
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 இலட்சம் வழங்கும் வைப்புநிதி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்





















